தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஏப். 5, 6ல் தமிழகம் வரும் நிதின் நவீன், அமித் ஷா!

தமிழகத்தில் நிதின் நவீன், அமித் ஷா தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளது பற்றி...

News image

கோப்புப் படம் - ENS

Updated On :2 ஏப்ரல் 2026, 6:18 pm IST

தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும்பொருட்டு பாஜக தேசிய தலைவர் நிதின் நவீன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30 தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய தலைவர்கள் பலரும் வேட்புமனு தாக்கல் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் பாஜக தலைவர்கள் பலரும் தமிழகத்திற்கு வந்து தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.

ஏப். 5 ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் நிதின் நவீனும் ஏப். 6 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தமிழகம் வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே பிரதமர் மோடி நாளை சென்னை வந்து பின்னர் புதுச்சேரியில் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார். பாஜக தலைவர்கள் தமிழகம் வருவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Summary

BJP leaders Nitin nabin, Amit Shah to visit Tamil Nadu on April 5 and 6

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.