மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

விஜய்யையும் அவரது கட்சியையும் விமர்சிக்கமாட்டேன்: சுந்தர். சி

மத்திய தொகுதி வேட்பாளர் இயக்குநர் சுந்தர். சி பேட்டி...

News image

சுந்தர்.சி - கோப்புப்படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 12:33 pm IST

தவெக தலைவர் விஜய் பற்றியும் அவரது கட்சி பற்றியும் விமர்சிக்கமாட்டேன் என மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் இயக்குநர் சுந்தர். சி கூறியுள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய நீதிக் கட்சி சார்பில் மதுரை மத்திய தொகுதியில் நடிகரும் இயக்குநருமான சுந்தர். சி போட்டியிடுகிறார். அவர் முதல்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு அரசியலில் களமிறங்குகிறார்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய சுந்தர். சி,

"விஜய் என் மீது மதிப்பும் அன்பும் கொண்டவர். என் மனைவியும் விஜய்யும் அக்கா - தம்பி போன்று பழகி வருகிறார்கள். அதனால் விஜய்யை எந்த வகையிலும் விமர்சிக்கவோ அவரது கட்சி பற்றி விமர்சிக்கவோ நான் தயாராக இல்லை. ஆனால் மதுரை மத்திய தொகுதியைப் பொருத்தவரை போட்டி உதயசூரியனுக்கும் இரட்டை இலைக்கும்தான். மதுரை மக்கள் எனக்கு வெற்றியைத் தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதேபோல மாதம் 15 நாள்கள் இனி மதுரையில்தான் இருப்பேன் என்று உறுதியாகச் சொல்லிக்கொள்கிறேன். தேர்தல் முடிவை வைத்துதான் சினிமாவின் அடுத்தகட்ட நகர்வு குறித்து முடிவெடுப்பேன்" என்று கூறினார்.

Summary

I will not criticize Vijay and his tvk party: Sundar C

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.