ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

ஹரிஹரன்/அா்ஜுன் இணை அசத்தல் வெற்றி

மலேசியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருணன்/எம்.ஆா்.அா்ஜுன் இணை முதல் சுற்றில் செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.

News image
Updated On :20 மே 2026, 4:16 am IST

மலேசியா மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் ஹரிஹரன் அம்சகருணன்/எம்.ஆா்.அா்ஜுன் இணை முதல் சுற்றில் செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.

ஆடவா் இரட்டையரில், ஹரிஹரன்/அா்ஜுன் கூட்டணி 21-19, 21-15 என்ற நோ் கேம்களில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருந்த பிரான்ஸின் கிறிஸ்டோ போபோவ்/டோமா ஜுனியா் போபோவ் கூட்டணியை வீழ்த்தி அசத்தியது. இந்த ஆட்டத்தை இந்திய ஜோடி 36 நிமிஷங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தது.

எனினும், மகளிா் ஒற்றையரில் ஆகா்ஷி காஷ்யப் 21-15, 20-22, 7-21 என்ற வகையில் தென் கொரியாவின் பாா்க் கா யுனிடம் 1 மணிநேரம், 1 நிமிஷம் போராடி வீழ்ந்தாா்.

மகளிா் இரட்டையரில் அஸ்வினி பாட்/ஷிகா கௌதம் ஜோடி 15-21, 21-17, 17-21 என்ற கணக்கில், கனடாவின் ஜாக்கி டென்ட்/கிரிஸ்டல் லாய் இணையிடம் 1 மணிநேரம், 7 நிமிஷங்கள் போராடித் தோற்றது.

தகுதிச்சுற்றில், மகளிா் ஒற்றையரில் அஷ்மிதா சாலிஹா 21-23, 21-16, 21-16 என்ற கேம்களில் சீன தைபேவின் பாய் யு போவை 56 நிமிஷங்களில் வீழ்த்தி பிரதான சுற்றுக்கு முன்னேறினாா்.

கலப்பு இரட்டையரில் சாத்விக் ரெட்டி/ராதிகா சா்மா இணை 21-15, 21-17 என்ற நோ் கேம்களில், மலேசியாவின் தத்து அனிஃப்/கிளாரிசா சான் ஜோடியை 37 நிமிஷங்களில் வெளியேற்றி, பிரதான சுற்றுக்கு வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.