பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

ஆயுஷ் ஷெட்டி முன்னேற்றம்

News image

ஆயுஷ் ஷெட்டி - ayush shetty insta

Updated On :4 ஜூன் 2026, 5:17 am IST

இந்தோனேசிய ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, ரோஹன் கபூர்/ருத்விகா ஷிவானி ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.

ஆடவர் ஒற்றையரில், ஆயுஷ் ஷெட்டி 8-21, 22-20, 21-15 என்ற கேம்களில், சீனாவின் வெங் ஹாங் யாங்கை தோற்கடித்தார்.

கலப்பு இரட்டையரில், ரோஹன் கபூர்/ருத்விகா ஷிவானி ஜோடி 21-14, 21-14 என்ற நேர் கேம்களில், சீன தைபேவின் யாங் போ சுவான்/ஹு லிங் ஃபாங் இணையை வீழ்த்தியது.

இதர இந்தியர்கள் தங்கள் பிரிவில் தோல்வி கண்டனர். ஹெச்.எஸ். பிரணய் 17-21, 21-16, 19-21 என்ற கணக்கில், அயர்லாந்தின் நாட் குயெனிடம் தோல்வியுற்றார்.

போட்டித்தரவரிசையில் 4}ஆம் இடத்திலிருந்த சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி கூட்டணி, மலேசியாவின் காங் காய் ஜிங்/ஆரோன் டாய் இணையை எதிர்கொண்டது. இந்திய இணை 6-11 என பின்தங்கியிருந்தபோது, சாத்விக் தோளில் வலி ஏற்பட, இந்திய ஜோடி போட்டியிலிருந்து விலகியது.

உன்னதி ஹூடா 15-21, 14-21 என, ஜப்பானின் நஜோமி ஒகுஹராவிடம் தோல்வியைத் தழுவினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.