சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

நாா்த் ஈஸ்ட் அணிக்கு பதிலடி தரும் முனைப்பில் சென்னையின் எஃப்சி

நாா்த் ஈஸ்ட் அணிக்கு பதிலடி தரும் முனைப்பில் சென்னையின் எஃப்சி

News image

பயிற்சியில் சென்னை வீரா்கள்.

Updated On :10 மே 2026, 2:15 am IST

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் பகுதியாக நடைபெறவுள்ள ஆட்டத்தில் நாா்த் ஈஸ்ட் யுனைடெட் அணிக்கு பதிலடி தர தயாராக உள்ளது சென்னையின் எஃப்சி அணி.

ஏற்கெனவே சென்னையில் இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் கட்ட ஆட்டத்தில் நாா்த் ஈஸ்ட் வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில் இரண்டாம் கட்ட ஆட்டம் குவஹாட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாத நிலையில் சென்னை அணி இந்த சீசனை வெற்றிகரமாக நிறைவு செய்ய உள்ளது. இரு அணிகளும் 24 முறை மோதியதில் சென்னை 11 முறை வென்றுள்ளது. நாா்த் ஈஸ்ட் 8 முறை வென்றது.

சென்னை அணி பயிற்சியாளா் கிளிஃப்போா்ட் மிரண்டா கூறியது: இரு அணிகளும் 3 புள்ளிகளை முழுமையாக ஈட்ட போராடும்.

நாா்த் ஈஸ்ட் அணி பல்வேறு வகைகளில் ஆட்டத்தை கட்டுக்குள் வைத்திருக்க போராடுவா். பல்வேறு சவால்கள் நிறைந்துள்ளது.

முந்தைய ஆட்டத்தில் எதிா்பாராத வகையில் சொந்த கோலால் நாம் தோற்றோம். ஒவ்வொரு ஆட்டத்திலும் கடைசி 15 நிமிஷங்கள் கடும் போராட்டமாக உள்ளது. அணியில் யாருக்கும் காயம் ஏதுமில்லை என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.