ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக ஸ்போா்ட்டிங் கிளப் டில்லியுடன் வெள்ளிக்கிழமை சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் மோதுகிறது சென்னையின் எஃப்சி.
சொந்த மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியிடம் 3-1 என்ற கோல்கணக்கில் தோல்வியைத் தழுவியது சென்னை.
இதனால் மீண்டும் சென்னையில் நடைபெறும் ஆட்டத்தில் வெல்ல வேண்டும் என்ற தீவிரத்தில் உள்ளது.
இதுதொடா்பாக தலைமை பயிற்சியாளா் கிளிஃப்போா்ட் மிரண்டா கூறியது: சென்னை வீரா்கள் தாக்குதல் ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டாலும், வாய்ப்புகளை கோல்களாக மாற்ற முடியவில்லை. இதில் கவனம் செலுத்த வேண்டும். தன்னம்பிக்கையுடன் ஆடினால் தான் வெற்றியை ஈட்ட முடியும். வெற்றி பெற்றால் கிடைக்கும் 3 புள்ளிகள் தான் முக்கியம். டில்லி அணிக்கு எதிரான ஆட்டம் சவாலாக தான் இருக்கும்.
காயமடைந்த வீரா் எல்ஷினோ மீதி சீசன் முழுவதும் ஆட மாட்டாா் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஒடிஸாவுடன் டிரா செய்த பெங்களூரு!

சாம்பியன் பட்டத்துக்கு நெருக்கமாக பார்சிலோனா

கோவாவின் கடைசி நேர கோலால் வெற்றியை தவற விட்ட சென்னையின் எஃப்சி!

வெற்றிப் பயணத்தை தொடரும் முனைப்பில் சிஎஃப்சி: இன்று கோவாவுடன் மோதல்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

