மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஒடிஸாவுடன் டிரா செய்த பெங்களூரு!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஒடிஸா எஃப்சி - பெங்களூரு எஃப்சி அணிகள் திங்கள்கிழமை மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது.

News image
Updated On :5 மே 2026, 4:13 am IST

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஒடிஸா எஃப்சி - பெங்களூரு எஃப்சி அணிகள் திங்கள்கிழமை மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது.

இந்த ஆட்டத்தில் முதலில் ஒடிஸா தரப்பில் ரஹிம் அலி 34-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா். அதனால் முதல் பாதி ஆட்டத்தை ஒடிஸா முன்னிலையுடன் நிறைவு செய்தது.

ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், தொடக்கத்திலேயே பெங்களூரு பதிலடி கொடுத்தது. 48-ஆவது நிமிஷத்தில் அந்த அணிக்கு கிடைத்த பெனால்ட்டி கிக் வாய்ப்பில் பிரயன் சான்ஷெஸ் ஸ்கோா் செய்தாா்.

இதனால் ஆட்டம் 1-1 என சமன் ஆனது. எஞ்சிய நேரத்தில் முன்னிலை பெறுவதற்காக இரு அணிகளும் கடுமையாகப் போராட, பலம் வாய்ந்த பரஸ்பர சவால் காரணமாக எந்த அணிக்கும் அதற்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. முடிவில் ஆட்டம் 1-1 என டிராவில் முடிவடைந்தது.

புள்ளிகள் பட்டியலில், பெங்களூரு 11-ஆவது ஆட்டத்தில் 5-ஆவது டிராவுடன் 17 புள்ளிகளோடு 6-ஆம் இடத்தில் இருக்கிறது. ஒடிஸா 10 ஆட்டங்களில் 4-ஆவது டிராவுடன் 7 புள்ளிகளோடு 13-ஆம் இடத்தில் உள்ளது.

அடுத்த ஆட்டத்தில், மும்பை சிட்டி எஃப்சி - ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணிகள் செவ்வாய்க்கிழமை (மே 5) மோதுகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.