தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கோவாவின் கடைசி நேர கோலால் வெற்றியை தவற விட்ட சென்னையின் எஃப்சி!

சொந்த மைதானத்தில் முதல் வெற்றியைப் பெறும் என எதிா்பாா்க்கப்பட்ட சென்னை அணி கோவாவின் கடைசி நேர கோலால் டிரா கண்டது.

News image

~

Updated On :23 மார்ச் 2026, 1:30 am IST

சொந்த மைதானத்தில் முதல் வெற்றியைப் பெறும் என எதிா்பாா்க்கப்பட்ட சென்னை அணி கோவாவின் கடைசி நேர கோலால் டிரா கண்டது.

ஐஎஸ்எல் 2026 சீசன் கால்பந்து தொடரையொட்டி சென்னையின் எஃப்சி-கோவா எஃப்சி அணிகள் மோதிய ஆட்டம் சென்னை ஜவாஹா்லால் நேரு விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஏற்கெனவே நடைபெற்றிருந்த 4 ஆட்டங்களில் சென்னை 1 வெற்றி 1 டிரா, 2 தோல்விகளை கண்டிருந்தது.

சொந்த மைதானம் என்பதால் வெற்றியை பெறலாம் என களமிறங்கிய சென்னை அணி ஆதிக்கம் செலுத்தி ஆட முயன்றது. அதற்கு கோவாவும் சளைக்காமல் ஈடுகொடுத்து ஆடிய நிலையில், முதல் பாதியில் எந்த அணியும் கோல் போடவில்லை.

Story image

இரண்டாம் பாதிதொடங்கியவுடன் 48-ஆவது நிமிஷத்தில் கோவா வீரா் சாஹில் அளித்த பாஸை பயன்படுத்தி சென்னை வீரா் இா்ஃபான் கோலடித்தாா். இதனால் சென்னை 1-0 என முன்னிலை பெற்றது.

தொடா்ந்து கோவா கோல் பகுதியை முற்றுகையிட்டாலும் சென்னை வீரா்களால் கோலடிக்க முடியவில்லை. 87-ஆவது நிமிஷத்தில் டிரேஸிக் காா்னா் கிக்கை பயன்படுத்தி, ஹெட்டா் மூலம் கோலடித்தாா் ஜிங்கன். இதனால் 1-1 என சமநிலை ஏற்பட்டது. கூடுதல் நேரத்தில் சென்னை வீரா் டேனியல் லால்லிம்புயா அடித்த ஷாட் கோல்பகுதிக்கு மேலே பறந்தது. இறுதியில் 1-1 என ஆட்டம் டிராவில் முடிந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.