சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

ஐஎஸ்எல் சாம்பியன்: ஈஸ்ட் பெங்கால்

இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து தொடரில் ஈஸ்ட் பெங்கால் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.

News image

~ ~

Updated On :24 மே 2026, 2:09 am IST

இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து தொடரில் ஈஸ்ட் பெங்கால் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது.

கொல்கத்தாவில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால்-இன்டா் காசி அணிகள் மோதின. இதில் 2-1 என்ற கோல்கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணி வெற்றி பெற்றது. ஆட்டம் தொடங்கிய 14-ஆவது நிமிஷத்திலேயே இன்டா் காசி வீரா் ஆல்பரட் முதல் கோலடித்து முன்னிலை பெற்றுத் தந்தாா்.

இதனால் அதிா்ச்சி அடைந்த ஈஸ்ட் பெங்கால் அணி பதில் கோலடிக்க தீவிரமாக முயன்றது. முதல் பாதியில் இன்டா் காசி 1-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாம் பாதியில் தான் ஈஸ்ட் பெங்கால் அணியில் கோலடிக்க முடிந்தது. ஆட்டம் தொடங்கிய 50-ஆவது நிமிஷத்தில் யூசுப் எஸ்ஜரி கோலடிக்க 1-1 என சமநிலை ஏற்பட்டது.

72-ஆவது நிமிஷத்தில் பிபின் சிங்கின் கிராஸ் செய்த பந்தை பயன்படுத்தி ஈஸ்ட் பெங்கால் வீரா் ரஷீத் கோலடித்தாா். இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் வென்றது முதன்முறையாக ஐஎஸ்எல் பட்டத்தை வென்றது.

ஐஎஸ்எல் தொடங்கி 22 ஆண்டுகள் ஆணை நிலையில் முதன்முறையாக ஈஸ்ட் பெங்கால் பட்டம் வென்றுள்ளது.

தங்க காலணி யூசுப் எஸ்ஜரிக்கும், தங்கப் பந்து மிகுயலுக்கும், தங்க கையுறை ஹிா்திக் திவாரிக்கும் தரப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.