தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சௌதி புரோ லீக்கில் 100ஆவது கோல் அடித்த ரொனால்டோ..! முதல் கோப்பை வெல்வாரா?

சௌதி புரோ லீக்கில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 100ஆவது கோல் குறித்து...

News image

கோல் அடித்த மகிழ்ச்சியில் ரொனால்டோ. - படம்: எக்ஸ் / கிறிஸ்டியானோ ரொனால்டோ.

Updated On :8 மே 2026, 5:47 pm IST

சௌதி புரோ லீக்கில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது 100ஆவது கோல் அடித்து அசத்தியுள்ளார். மொத்தமாக 971 கோல்கள் அடித்துள்ளார்.

போர்ச்சுகலைச் சேர்ந்த ரொனால்டோ (41 வயது) 2023 முதல் சௌதி லீக்கில் அல் - நாசர் கிளப்பில் விளையாடி வருகிறார். முன்னதாக ரியல் மாட்ரிட், மான்செஸ்டர் யுனைடெட் அணிகளில் விளையாடியிருந்தார்.

சௌதி லீக்கில் அல் - ஷபாத் அணியுடனான போட்டியில் அல் - நாசர் அணி 4-2 என வென்றது. இதில் ரொனால்டோ 75ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். ஜாவோ பெலிக்ஸ்3, 10, 90+8ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து மிரட்டினார்.

இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை அல் - நாசர் அணி தக்கவைத்துள்ளது. ரொனால்டோ தனது முதல் கோப்பையை இந்த அணியில் பெற ஆயுத்தமாகி வருகிறார்.

அல்- நாசர் அணிக்காக இதுவரை மொத்தமாக 105 போட்டிகளில் விளையாடியுள்ள ரொனால்டோ 100 கோல்கள் அடித்துள்ளார். ரொனால்டோ விரைவில் 1000 கோல்கள் அடித்து வரலாறு படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Cristiano Ronaldo scores his 100th Saudi Pro League goal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.