தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

2ஆவது டிவிஷன் அணியிடம் காலிறுதியில் தோற்ற ஆர்செனல்..! இந்த சீசனில் 2ஆவது கோப்பை இழப்பு!

எப்ஃஏ கோப்பை காலிறுதியில் தோல்வியுற்ற ஆர்செனல் அணி குறித்து...

News image

சோகத்தில் வெளியேறிய ரசிகர்கள். - படம்: ஏபி

Updated On :5 ஏப்ரல் 2026, 3:44 pm IST

இங்கிலாந்தில் நடைபெறும் எப்ஃஏ கோப்பை காலிறுதியில் பிரீமியர் லீக்கில் முதலிடத்தில் இருக்கும் ஆர்செனல் அணி இரண்டாம் டிவிஷன் அணியான் சௌத்தாம்டன் உடன் 1-2 என தோல்வியுற்றது.

பிரீமியர் லீக்கில் இருக்கும் மற்ற அணிகளின் ரசிகர்கள் ஆர்செனல் ரசிகர்களை சமூக வலைதளத்தில் கேலி செய்வதால், அவர்கள் மிகுந்த சோகத்தில் இருக்கிறார்கள்.

எப்ஃஏ கோப்பை காலிறுதியில் சௌத்தாம்டன் அணியினர் 35, 85ஆவது நிமிஷங்களில் கோல் அடிக்க, ஆர்செனல் அணியில் ஆறுதலாக 68ஆவது நிமிஷத்தில் விக்டர் கியோகெரெஸ் கோல் அடித்தார்.

ஆர்செனல் அணியில் நட்சத்திர வீரர்கள் விளையாடாதது தோல்விக்கு காரணமாக அமைந்தது. முன்னதாக, கராபோ கோப்பையில் 2-0 என இறுதிப் போட்டியில் தோற்றிருந்தது. இதன்ம்மூலம் இந்த சீசனில் 2 கோப்பைகள் ஆர்செனல் கையை விட்டு நழுவிச் சென்றுள்ளது.

பிரீமியர் லீக்கில் முதலிடத்தில் இருக்கும் ஆர்செனல் சாம்பியன்ஸ் லீக்கில் காலிறுதியில் இருக்கிறது. இந்த இரண்டிலாவது கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது

Summary

Arsenal suffer a humiliating defeat in the FA Cup and lose a key player in the title race.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.