மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மியாமி ஓபனில் பட்டம்..! சன்ஷைன் டபுள் சாதனையும் படைத்த சின்னர்!

மியாமி ஓபன் ஆடவர் பிரிவில் பட்டம் வென்ற யானிக் சின்னர் குறித்து...

News image

மியாமி ஓபன் ஆடவர் பிரிவில் பட்டம் வென்ற சின்னர். - படம்: ஏபி

Updated On :30 மார்ச் 2026, 3:21 pm IST

மியாமி ஓபன் ஆடவர் பிரிவில் இத்தாலியின் யானிக் சின்னர் 6-4, 6-4 என்ற செட்களில் வென்று கோப்பையைக் கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலமாக ’சன்ஷைன் டபுள்’ என்ற சாதனைக்கும் சொந்தக்காரராக மாறியுள்ளார்.

முன்னதாக, மகளிர் பிரிவிலும் இதேபோல முதல்முறையாக அரினா சபலென்கா ’சன்ஷைன் டபுள்’ என்ற சாதனையைப் படைத்ததும் குறிப்பிடத்தக்கது.

மியாமி ஓபன் இறுதிப் போட்டியில் செக் நாட்டின் ஜிரி லெஹெக்கா மற்றும் இத்தாலி நாட்டின் யானிக் சின்னரும் மோதினார்கள். இந்தப் போட்டியில் சின்னர் 6-4, 6-4 என வெற்றியடைந்தார்.

கடைசியாக சன்ஷைன் டபுள் ஆடவர் பிரிவில் 2017ல் ரோஜர் ஃபெடரர் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டு தொடரிலும் ஒரு செட் கூட இழக்காமல் இந்த சாதனையை செய்துள்ள ஒரே ஆடவராக சின்னர் வரலாறு படைத்துள்ளார்.

சின்னருக்கு இது இரண்டாவது மியாமி ஓபன் பட்டமென்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 2016ஆம் ஆண்டு ஆடவர், மகளிர் பிரிவில் நோவக் ஜோகோவிச், விக்டோரியா அஜரென்கா சன்ஷைன் டபுள் வென்றிருந்தார்கள். தற்போது இந்தாண்டு சின்னர், சபலென்கா வென்றுள்ளார்கள்.

Summary

Sinner follows Sabalenka's lead with a 'Sunshine Double,' beating Lehecka in Miami Open final.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.