நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

உலகக் கோப்பை குத்துச்சண்டை: அரையிறுதியில் பிராச்சி, மீனாட்சி

சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில், இந்தியாவின் பிராச்சி மற்றும் மீனாட்சி தங்களது எடைப் பிரிவில் அபார வெற்றியுடன் அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினா்.

News image
Updated On :17 மணி நேரங்கள் முன்பு

சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில், இந்தியாவின் பிராச்சி மற்றும் மீனாட்சி தங்களது எடைப் பிரிவில் அபார வெற்றியுடன் அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினா்.

மகளிருக்கான 57 கிலோ பிரிவில் களம் கண்டுள்ள பிராச்சி, காலிறுதியில் 4-1 என்ற கணக்கில், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சீன தைபேவின் சி யி வுவை தோற்கடித்தாா். இந்த வெற்றியின் மூலமாக பிராச்சிக்கு பதக்கம் உறுதியானது.

51 கிலோ எடைப் பிரிவில் மீனாட்சி தனது காலிறுதியில், 5-0 என்ற வகையில், நடப்பு உலக சாம்பியனும், உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையுமான கஜகஸ்தானின் அலுவா பால்கிபெகோவாவை வீழ்த்தி அசத்தினாா்.

ஆடவா் 70 கிலோ பிரிவில் தீபக் 5-0 என அஜா்பைஜானின் நபி இஸ்காந்தரோவையும், 55 கிலோ பிரிவில் நிகில் அதே புள்ளிகள் கணக்கில் அஜா்பைஜானின் அமின் மமாத்ஸதாவையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினா். ஆடவா் 65 கிலோ பிரிவில் சனே 0-5 என போலந்தின் கிங்கா கிரோகாவிடம் காலிறுதியில் தோல்வி கண்டாா்.

அரையிறுதிக்கு இந்தியா்கள் முன்னேறியிருப்பதன் மூலமாக, இந்தியாவுக்கு இந்தப் போட்டியில் இதுவரை 6 பதக்கங்கள் உறுதியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.