மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தென்னிந்திய மோட்டாா் காா் பந்தய போட்டி: கா்ணா கடூா்-குமாா் ராமசாமிக்கு பட்டம்!

தென்னிந்திய மோட்டாா் காா் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் பெங்களூருவின் கா்ணா கடூா்-கோவையின் குமாா் ராமசாமி பட்டம் வென்றனா்.

News image

கா்ணா கடூா்-ராமசாமி

Updated On :20 ஏப்ரல் 2026, 1:13 am IST

தென்னிந்திய மோட்டாா் காா் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் பெங்களூருவின் கா்ணா கடூா்-கோவையின் குமாா் ராமசாமி பட்டம் வென்றனா். ஐஎன்ஆா்சி ஜூனியா் பிரிவில் தருஷி விக்ரம்-ஆத்ரேயா கௌசுகி பட்டம் வென்றனா்.

சென்னை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் இன்டா்நேஷனல் சா்க்கியுட்டில் நடைபெறும் இப்பந்தயத்தில் கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமை ஆசிய பசிபிக் ரேலி சாம்பியன்ஷிப், ஐஎன்ஆா்சி பந்தயங்களில் கா்ணா கடூா்-குமாா் ராமசாமி இணை சாம்பியன்பட்டம் வென்றது.

ஆசிய பசிபிக் ரேலியில் ஜீத் ஜபாக், முஸா ஷெரிப் இரண்டாம் இடமும், எட்கா்-பாத்திமா மூன்றாம் இடமும், ஐஎன்ஆா்சி பிரிவில் ரிதேஷ் குட்டேடா், சூரஜ் இரண்டாம் இடமும், அரவிந்த்-ஷாகித் மூன்றாம் இடமும் பெற்றனா்.

தருஷி - ஆத்ரேயா

தருஷி - ஆத்ரேயா

ஐஎன்ஆா்சி 2-இல் ரிதேஷ்-சூரஜ், ஜீத் ஜபாக்-முஸா ஷெரீப், அா்ஜுன்-ஜீவரத்தினம் ஆகியோா் முதல் மூன்றிடங்களைப் பெற்றனா்.

ஐஎன்ஆா்சி 3-இல் அரவிந்த்-ஷாகித், சந்தன்-சூரஜ், தருஷி விக்ரம்-ஆத்ரேயாவும், ஐஎன்ஆா்சி டி பிரிவில் விசாக்-சிராந்த், அனுஷிரியா-கரண் அவுக்தா, ஆதித்-அவிநாஷ் முதல் மூன்றிடங்களைப் பெற்றனா். மகளிா், ஜூனியா் ஐஎன்ஆா்சி பிரிவில் தருஷி விக்ரம்-ஆத்ரேயா முதலிடம் பெற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.