மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ரியல் மாட்ரிட் பின்னடைவு: முதலிடத்தை தக்கவைத்த பார்சிலோனா!

லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் அணிகள் போட்டிகள் குறித்து...

News image

கால்பந்தை தன்வசப்படுத்தும் முயற்சியில் பார்சிலோனா, அத்லெடிகோ மாட்ரிட். - படம்: ஏபி

Updated On :5 ஏப்ரல் 2026, 1:07 pm IST

லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி அதெல்டிகோ மாட்ரிட்டை வீழ்த்தி முதலிடத்தை தக்கவைத்துள்ளது. மாறாக, ரியல் மாட்ரிட் அணி தோல்வியுற்ற கோப்பைக்கான பட்டியலில் பின்னடைவச் சந்தித்திருக்கிறது.

அதெல்டிகோ மாட்ரிட்டை அதன் சொந்த மண்ணில் பார்சிலோனா அணி 2-1 என வீழ்த்தியது. 39ஆவது நிமிஷத்தில் சிமியானோ கோல் அடிக்க, ராஷ்போர்டு 42ஆவது நிமிஷத்தில் சமன்படுத்தினார்.

விறுவிறுப்பாகச் சென்ற இரண்டாம் பாதியில் லெவண்டாவ்ஸ்கி 87ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். இறுதியில், 2-1 என பார்சிலோனா வென்றது.

ரியல் மாட்ரிட் அணி 1-2 என மல்லோர்கா அணியிடம் வீழ்ந்தது. சாம்பியன்ஸ் லீக்கில் அசத்தி வந்த ரியல் மாட்ரிட் அணிக்கு லா லிகா தொடரில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பார்சிலோனா அணி 76 புள்ளிகளுடனும் ரியல் மாட்ரிட் 69 புள்ளிகளுடனும் இருக்கின்றன. கோப்பைக்கான பட்டியலில் பார்சிலோனா 7 புள்ளிகள் முன்னிலையில் இருக்கிறது.

Summary

Real Madrid Setback: Barcelona Retains Top Spot!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.