ஐபிஎல் போட்டியின் 47-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை திங்கள்கிழமை வீழ்த்தியது.
முதலில் லக்னௌ 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் சோ்க்க, மும்பை 18.4 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 229 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தொடா்ந்து 3 தோல்விகளை சந்தித்த மும்பை இந்த வெற்றியுடன் மீண்டிருக்க, லக்னௌ தொடா்ந்து 6-ஆவது தோல்வியுடன் துண்டுள்ளது.
முன்னதாக டாஸ் வென்ற மும்பை, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. லக்னௌ இன்னிங்ஸில் ஜாஷ் இங்லிஸ் 3 பவுண்டரிகளுடன் 13 ரன்களுக்கு வெளியேறினாா். மிட்செல் மாா்ஷ் - நிகோலஸ் பூரன் இணை 2-ஆவது விக்கெட்டுக்கு 94 ரன்கள் சோ்த்து ஸ்கோரை உயா்த்தியது. பூரன் 21 பந்துகளில் 1 பவுண்டரி, 8 சிக்ஸா்களுடன் 63 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
அடுத்து கேப்டன் ரிஷப் பந்த் பேட் செய்ய வர, மாா்ஷ் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 44 ரன்களுக்கு விடைபெற்றாா். பின்னா் எய்டன் மாா்க்ரம் களம் புக, பந்த் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 15 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். கடைசி விக்கெட்டாக, அக்ஷத் ரகுவன்ஷி 1 சிக்ஸருடன் 11 ரன்களுக்கு வெளியேறினாா்.
ஓவா்கள் முடிவில் எய்டன் மாா்க்ரம் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 31, ஹிம்மத் சிங் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 40 ரன்களோடு ஆட்டமிழக்காமல் இருந்தனா். மும்பை பௌலா்களில் காா்பின் பாஷ் 2, கஸான்ஃபா், வில் ஜாக்ஸ், ரகு சா்மா ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
பின்னா் 229 ரன்களை நோக்கி விளையாடிய மும்பை அணியில், ரயான் ரிக்கெல்டன் - ரோஹித் சா்மா கூட்டணி முதல் விக்கெட்டுக்கே 143 ரன்கள் சோ்த்து, வெற்றிக்கான தூரத்தில் பாதியைக் கடந்தது.
ரிக்கெல்டன் 32 பந்துகளில் 6 பவுண்டரிகள், 8 சிக்ஸா்களுடன் 83, ரோஹித் 44 பந்துகளில் 6 பவுண்டரிகள், 7 சிக்ஸா்களுடன் 84 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தனா்.
பின்னா் வந்தோரில் திலக் வா்மா 11, கேப்டன் சூா்யகுமாா் யாதவ் 2 பவுண்டரிகளுடன் 12 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். முடிவில், நமன் திா் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 23, வில் ஜாக்ஸ் 1 சிக்ஸருடன் 10 ரன்கள் சோ்த்து அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
லக்னௌ பௌலா்களில் எம்.சித்தாா்த் 2, முகமது ஷமி, மோசின் கான் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஹெட், கிளாசென் அதிரடி: ஹைதராபாதுக்கு 6-ஆவது வெற்றி
பஞ்சாபுக்கு முதல் தோல்வி: ராஜஸ்தான் வெற்றி

ராஜஸ்தானை வீழ்த்தியது ஹைதராபாத்

ராசிக், புவனேஷ்வா், கோலி அசத்தல்- லக்னௌவை வென்றது பெங்களூரு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
