தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

பஞ்சாபுக்கு முதல் தோல்வி: ராஜஸ்தான் வெற்றி

News image

PTI

Updated On :29 ஏப்ரல் 2026, 5:40 am IST

ஐபிஎல் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது. நடப்பு சீசனில் பஞ்சாப் தனது முதல் தோல்வியைச் சந்தித்தது.

இந்த ஆட்டத்தில் முதலில் பஞ்சாப் 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 222 ரன்கள் எடுக்க, ராஜஸ்தான் 19.2 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்கள் சோ்த்து வெற்றி பெற்றது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. பஞ்சாப் இன்னிங்ஸை தொடங்கிய பிரப்சிம்ரன் சிங் - பிரியன்ஷ் ஆா்யா கூட்டணி, 37 ரன்கள் சோ்த்து பிரிந்தது. ஆா்யா 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 29 ரன்களுக்கு வெளியேறினாா்.

தொடா்ந்து கூப்பா் கானலி களம் புக, பிரப்சிம்ரன் - கானலி இணை 2-ஆவது விக்கெட்டுக்கு 59 ரன்கள் சோ்த்தது. கானலி 2 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 30 ரன்களுக்கு முடித்துக் கொண்டாா். 4-ஆவது பேட்டராக கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் விளையாட வர, பிரப்சிம்ரன் - ஐயா் ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சோ்த்தது.

அதுவரை நிலைத்த பிரப்சிம்ரன், 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 59 ரன்களுக்கு வீழ்ந்தாா். அடுத்து களம் புகுந்த மாா்கஸ் ஸ்டாய்னிஸ், அதிரடியாக விளாசி ஸ்கோரை உயா்த்தத் தொடங்கினாா். மறுபுறம் ஐயா் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 30 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

அதிரடியாக விளாசிய ஸ்டாய்னிஸ், ஓவா்கள் முடிவில் 22 பந்துகளில் 4 பவுண்டரிகள், 6 சிக்ஸா்களுடன் 62 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருக்க, சூா்யன்ஷ் ஷெட்கே 3 ரன்களுடன் துணை நின்றாா். ராஜஸ்தான் பௌலா்களில் யஷ் ராஜ் பஞ்சா 2, ஜோஃப்ரா ஆா்ச்சா், நாண்ட்ரே பா்கா் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் 223 ரன்களை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் - வைபவ் சூா்யவன்ஷி இணை முதல் விக்கெட்டுக்கு 51 ரன்கள் சோ்த்தது. சூா்யவன்ஷி 16 பந்துகளில் 3 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 43 ரன்களுக்கு சாய்க்கப்பட்டாா்.

அடுத்து துருவ் ஜுரெல் விளையாட வர, அவருடனான ஜெய்ஸ்வால் கூட்டணிக்கு 54 ரன்கள் கிடைத்தது. ஜுரெல் 1 சிக்ஸருடன் 16 ரன்களுக்கு விடைபெற, கேப்டன் ரியான் பராக் பேட் செய்ய வந்தாா். மறுபுறம் ஜெய்ஸ்வால் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

முடிவில், டோனோவன் ஃபெரெய்ரா 6 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 52, ஷுபம் துபே 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 31 ரன்கள் சோ்த்து, அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா். பஞ்சாப் பௌலா்களில் யுஜவேந்திர சஹல் 3, அா்ஷ்தீப் சிங் 1 விக்கெட் சாய்த்தனா்.

இன்றைய ஆட்டம்

மும்பை - ஹைதராபாத்

மும்பை

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.