உலகத் தரத்திலான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அச்சமின்றி அதிரடியாக விளையாடியதாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் பாராட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் குவாஹாட்டியில் நேற்று (மார்ச் 30) நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிஎஸ்கேவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிரடியாக விளையாடிய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி 15 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் 17 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில், உலகத் தரத்திலான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக வைபவ் சூர்யவன்ஷி அச்சமின்றி அதிரடியாக விளையாடியதாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: வைபவ் சூர்யவன்ஷி மிகவும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பான பந்துவீச்சுக்கு எதிராக அவர் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தினார். புதிய பந்தில் சிறப்பாக பந்துவீசி சர்வதேச வீரர்களுக்கு சவாலளிக்கக் கூடிய மாட் ஹென்றியின் பந்துவீச்சை எளிதாக விளையாடினார். பந்தை இரண்டு விதமாக ஸ்விங் செய்யக் கூடிய கலீல் அகமது பந்துவீச்சிலும் சிறப்பாக விளையாடினார்.
அதுமட்டுமின்றி, சிறந்த லென்த்தில் பந்துவீசக் கூடிய அன்ஷுல் கம்போஜ் மற்றும் மிஸ்டிரி பந்துவீச்சாளரான நூர் அமகமது பந்துவீச்சையும் அவர் விட்டுவைக்கவில்லை. உலகத் தரத்திலான பந்துவீச்சாளர்களை அவர் அழுத்தத்தில் வைத்திருந்தார். அவரது ஆட்டம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. இந்த சீசன் அவருக்கு மிகவும் சிறப்பானதாக அமையப் போகிறது என்றார்.
Summary
Sanjay Bangar has praised Rajasthan Royals player Vaibhav Suryavanshi for playing fearlessly and aggressively against world-class bowlers.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிரடியில் மிரட்டிய சூர்யவன்ஷி; இன்ப அதிர்ச்சியளித்த விராட் கோலி!

பும்ராவின் முதல் ஓவரை அடித்து என் மீதான அழுத்தத்தை சூர்யவன்ஷி நீக்கினார்: ஜெய்ஸ்வால்

ஏலத்தில் எடுக்கப்பட்டபோது என்னுடைய நோக்கம் இதுதான்: வைபவ் சூர்யவன்ஷி

வைபவ் சூர்யவன்ஷிக்கு எந்தவொரு அழுத்தமும் கொடுக்கக் கூடாது: ரியான் பராக்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை


