நடப்பு சீசனில் (ஐபிஎல் 2026) இம்பாக்ட் பிளேயர் விதி நீடிக்குமா என்பது தொடர்பாக அனைத்து ஐபிஎல் அணிகளின் கேப்டன்களுடன் பிசிசிஐ ஆலோசனை நடத்தியுள்ளது.
ஐபிஎல் கேப்டன்கள் குழப்பமான பதிலை அளித்துள்ளதால், அது தொடர்பான முடிவை இப்போதைக்கு எடுக்கப்போவதில்லை என பிசிசிஐ தெரிவித்துள்ளதாக தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளன.
ஐபிஎல் 2026 சீசன் போட்டிகள் மார்ச். 28ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் முதல்கட்டமாக 20 ஐபிஎல் போட்டிகள் ஏப்.12 வரை நடத்த திட்டமிட்டுள்ளன.
கடந்த 2023 முதல் இம்பாக்ட் பிளேயர் விதி அறிமுகப்படுத்தப்பட்டது. போட்டியின் எதாவது ஒரு கட்டத்தில் ஒரு வீரரை இரு அணியினர் தேர்வு செய்துகொள்ள இந்த விதி அனுமதிக்கிறது.
இந்த விதியினார் ஆல்ரவுண்டர்களுக்கான தேவை குறைவதாக, பலரும் கருத்து தெரிவித்தார்கள். தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்ஷர் படேல் இந்த விதிக்கு எதிராக பேசினார். முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியாவும் இதற்கு எதிராகப் பேசியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நடைபெற்ற ஐபிஎல் கேப்டன்களுடனான ஆலோசனையில் மாறுபட்ட கருத்துகள் பெறப்பட்டுள்ளன. பல கேப்டன்கள் இந்த விதிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளதால், பிசிசிஐ இந்த சீசனில் எந்த முடிவையும் எடுக்காது என பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த இம்பாக்ட் பிளேயர் விதி 2027 வரை இருக்குமென ஏற்கெனவே கூறியிருப்பதால், இந்த சீசனில் மாற்றம் இருக்காதென எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்த விதி இல்லாமல் இருப்பதால், ஆல் ரவுண்டர்களுக்கான தேவை குறையுமென்பதாலும் வருங்காலத்தை முன்னிட்டு இந்த விதியை நீக்க வாய்ப்பிருப்பதாக முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
Summary
Majority of IPL captains express reservations on contentious Impact Player rule.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஷிவம் துபே பிளேயிங் லெவனில் இல்லை..! இம்பாக்ட் பிளேயர் பட்டியலில் சேர்ப்பு!

இம்பாக்ட் வீரராக களமிறக்கப்பட்ட ஷர்துல் தாக்குரின் வித்தியாசமான சாதனை..! கோபத்தில் மும்பை ரசிகர்கள்!

இம்பாக்ட் வீரர் விதி இளம் வீரர்களுக்கான பொன்னான வாய்ப்பு: பிரப்சிம்ரன் சிங்

இம்பாக்ட் வீரர் விதிக்கு ஆர்சிபி தலைமைப் பயிற்சியாளர் ஆதரவு!
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


