டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், 2024-இல் கிடைத்த வெற்றி அனுபவமிக்க வீரர்களின் இந்திய அணிக்கானது என்றும், 2026-இல் கிடைத்த வெற்றி இளம் அதிரடி வீரர்களின் இந்திய அணிக்கானது என்றும் இந்திய கேப்டன் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறினார்.
அண்மையில், இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியன் ஆனது. கோப்பையைத் தக்கவைத்த முதல் அணி, சொந்த மண்ணில் கோப்பை வென்ற முதல் அணி, 3 முறை கோப்பை வென்ற ஒரே அணி ஆகிய சாதனைகளை இந்தியா படைத்தது.
இந்நிலையில், அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், "பிடிஐ' செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
2024, 2026-இல் டி20 உலகக் கோப்பை வென்ற இரு இந்திய அணிகளுக்குமே சிறு வித்தியாசம் உள்ளது. 2024-இல் கோப்பை வென்றது, அனுபவமிக்க வீரர்கள் அடங்கிய இந்திய அணியாகும். இந்த முறை கோப்பை வென்றிருப்பது, இளம் அதிரடி வீரர்கள் இருக்கும் இந்திய அணியாகும்.
அப்போது அணியில் இருந்த வீரர்கள் தங்களுக்கான பணி என்ன என்பதை மிகத் தெளிவாக அறிந்திருந்தனர். அனுபவம் அவர்களுக்கு அந்தத் திறமையை அளித்திருந்தது. இந்த முறை இந்திய அணியில் அனுபவ வீரர்கள் குறைவாக இருந்தாலும், உத்வேகமிக்க, தீவிரமான வீரர்கள் இருந்தது சாதகமாகும்.
அனைவருமே 25-27 வயதுடையவர்கள். சொந்த மண்ணில் உலகக் கோப்பை வெல்லும் உணர்வு எப்படி இருக்கும் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டியிருந்தது. சொந்த மண்ணில் விளையாடும்போது எதிர்பார்ப்புகளால் ஏற்படும் அழுத்தத்தை உணர்ந்து விளையாட வேண்டியிருந்தது. அது தவிர, திறமை அடிப்படையில் இரு அணிகளிலுமே பெரிதாக வித்தியாசம் இருக்கவில்லை.
2024-இல் அணியில் ஒரு வீரராக இருந்தபோதும், 2026-இல் அணியின் கேப்டனாக இருக்கும்போதும் எனது உணர்வுகள் ஒரே மாதிரியாகத் தான் இருந்தன. சொந்த மண்ணில் விளையாடுவதால், கோப்பை வென்றாக வேண்டும் என்ற எண்ணம் மிகுந்திருந்தது என்றார் சூர்யகுமார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெண் குழந்தைக்கு தந்தையானார் சூர்யகுமார் யாதவ்!
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து மகளிரணி அறிவிப்பு!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்து மகளிர் அணி அறிவிப்பு

சர்வதேச டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவின் எதிர்காலம் என்ன?
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

