ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோனி ஒருபோதும் யுவராஜை நீக்கக் கூறியதில்லை! தேர்வுக் குழு முன்னாள் தலைவர்

தோனி - யுவராஜ் சிங் குறித்து தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவர் கூறியது...

News image

தோனி, யுவராஜ்

Updated On :13 மார்ச் 2026, 1:40 pm IST

இந்திய கேப்டனாக மகேந்திர சிங் தோனி விளையாடிய போது ஒருநாளும் யுவராஜ் சிங்கை அணியில் இருந்து நீக்கக் கூறியது கிடையாது என்று அப்போதைய தேர்வுக் குழுத் தலைவர் சந்தீப் பட்டீல் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் பொறுப்பேற்ற பிறகு, மூத்த வீரர்களான சேவாக், யுவராஜ் சிங் போன்றவர்களை அணியில் இருந்து நீக்குமாறு தேர்வுக் குழுவிடம் பரிந்துரைத்தாக பல ஆண்டுகளாக பரவி வருகின்றன.

யுவராஜ் சிங்கின் தந்தை யோகராஜ் சிங், கடந்த காலங்களில் பலமுறை தனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை தோனிதான் அழித்தார் என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவரின் குற்றச்சாட்டுகள் பல முறை வைரலாகப் பகிரப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவர் சந்தீப் பட்டீல், யுவராஜ் சிங் - தோனி விவகாரம் குறித்து பேசியுள்ளார்.

”யுவராஜ் சிங்கை தேர்வு செய்ய வேண்டாம் என்று தேர்வுக் குழுக் கூட்டத்திலோ, போட்டியின் போதோ, வெளிநாட்டுப் பயணங்களின் போதோ எந்த சூழ்நிலையிலும் ஒருமுறைகூட தோனி கூறியது கிடையாது.

தேர்வுக் குழுவின் மீது தோனிக்கு எப்போதும் முழு நம்பிக்கை இருந்துள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், யுவராஜ் சிங் தந்தையின் கருத்துகள் குறித்து பதிலளித்த அவர், ”மகன் மீது தந்தை கவலைப்படுவது தவறல்ல. ஆனால், தவறானவர் மீது பழிப் போடப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மகேந்திர சிங் தோனி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே பேட்டியில் கெளதம் கம்பீர் குறித்து பேசிய சந்தீப் பட்டீல் தெரிவித்ததாவது:

“நான் தேர்வுக் குழுத் தலைவராக இருந்த காலக்கட்டத்தில்தான் கம்பீருக்கு பதிலாக தவான் இந்திய அணியில் இடம்பிடித்தார். அதுநாள் வரை என்னுடன் நெருங்கி பழகி வந்த கம்பீர், பேசுவதையே நிறுத்திவிட்டார்.

பொது நிகழ்வுகளில் ஒன்றாக பங்கேற்ற போதும் எனது முகத்தைகூட அவர் பார்க்கவில்லை. கம்பீர் எதையும் எளிதில் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார். இருப்பினும், கம்பீர் மீது எனக்கு மரியாதை உள்ளது” என்றார்.

தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கம்பீர் பொறுப்பு வகிப்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Dhoni never asked to remove Yuvraj! Former chairman of selection committee

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.