மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஷுப்மன் கில், ஜோஸ் பட்லர் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 2-வது வெற்றி!

ஐபிஎல் தொடரில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

News image

பந்தை எதிர்கொள்ளும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் - படம் | ஐபிஎல் (எக்ஸ்)

Updated On :12 ஏப்ரல் 2026, 7:38 pm IST

ஐபிஎல் தொடரில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் லக்னௌவில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, லக்னௌ முதலில் விளையாடியது.

பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு!

முதலில் விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது.

லக்னௌ அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் அய்டன் மார்க்ரம் 21 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, நிக்கோலஸ் பூரன் 19 ரன்களும், ரிஷப் பந்த், அப்துல் சமத் மற்றும் முகுல் சௌதரி தலா 18 ரன்களும் எடுத்தனர். ஜார்ஜ் லிண்டே 16 ரன்கள் எடுத்தார்.

குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய பிரசித் கிருஷ்ணா 4 ஓவர்களில் 28 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அசோக் சர்மா இரண்டு விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் ககிசோ ரபாடா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

ஷுப்மன் கில், ஜோஸ் பட்லர் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 2-வது வெற்றி!

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி, 18.4 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸை வீழ்த்தியது.

குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சாய் சுதர்சன் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில் களமிறங்கினர். சாய் சுதர்சன் 15 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளிக்க, ஷுப்மன் கில் மற்றும் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடியது.

நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் ஜோஸ் பட்லர் அரைசதம் விளாசி அசத்தினர். ஷுப்மன் கில் 40 பந்துகளில் 56 ரன்களும் (6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்), ஜோஸ் பட்லர் 37 பந்துகளில் 60 ரன்களும் (11 பவுண்டரிகள்) எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் 21 ரன்களுடனும், ராகுல் திவாட்டியா 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

லக்னௌ தரப்பில் முகமது ஷமி, பிரின்ஸ் யாதவ் மற்றும் திக்வேஷ் சிங் ரதி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

நடப்பு ஐபிஎல் தொடரில் நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

Summary

In the IPL series, the Gujarat Titans defeated the Lucknow Super Giants by 7 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.