தில்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 115* ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்ட சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகன் விருது வென்று அசத்தினார்.
இந்தப் போட்டியில் சதமடித்த போது ஓய்வறையை நோக்கி சல்யூட் அடிப்பது போல செய்வார். இதற்கு காரணம் பயிற்சியாளர் என விருது வென்ற பிறகு சாம்சன் பேசியது சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.
நேற்றிரவு சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 212/2 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய தில்லி அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆட்ட நாயகன விருது வென்ற சஞ்சு சாம்சன் பேசியிருப்பதாவது:
புதிய அணிக்கு வந்ததுபோல் இல்லை. இரண்டாவது வீடு போலவே இருக்கிறது. அனைவருமே நன்றாக பழகுகிறார்கள். மூன்று தோல்விகளுக்குப் பிறகு கூட 50 நொடிகள்தான் மீட்டிங் நடந்தது.
நான் சதமடித்து சல்யூட் அடித்தது பயிற்சியாளர் பிளெமிங்கிற்குதான். இந்தப் போட்டிக்கு முன்பாக அவருக்கு எவ்வளவு அழுத்தம் இருந்தது எனத் தெரியும். ஐந்து ஆண்டுகளாக ஒரு அணியை வழிநடத்துவது எவ்வளவு கடினம் என்பது தெரியும். அதனால், அவருக்குச் சமர்ப்பிக்கத் தோன்றியது என்றார்.
இந்தப் போட்டிக்கு முன்னதாக பயிற்சியாளர் பிளெமிங், “ ஐபிஎல் தொடரில் வேறு ஒரு அணிக்காக (ராஜஸ்தான் ராயல்ஸ்) விளையாடிவிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைவதற்கு சஞ்சு சாம்சனுக்கு சிறிது நேரம் தேவைப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 5 அல்லது 6 மாற்றங்கள் நடந்துள்ளன. அதனால், இப்போதிருப்பது பழைய சிஎஸ்கே அணி கிடையாது. களத்துக்கு வெளியே வீரர்களுக்கு இடையே நிறைய பிணைப்பு தேவைப்படுகிறது.
மூத்த வீரர்களுடன் இணைந்து அணிக்காக ரன்கள் குவிக்க வேண்டுமென்பதில் சஞ்சு சாம்சன் உறுதியாக இருக்கிறார். டி20 உலகக் கோப்பைத் தொடரில் அவர் எப்படி விளையாடினார் என்பதை நாம் பார்த்தோம். ரன்கள் குவிக்கத் தொடங்கிவிட்டால், சஞ்சு சாம்சன் மிகவும் அபாயகரமான வீரராக இருப்பார். அதனால், அவருக்கு தொடர்ந்து ஆதரவளித்து நம்பிக்கையை கொடுத்தால் அதுவே போதுமானது” எனக் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மைல்கல்கள் சிறப்பானதுதான்; ஆனால்... மனம் திறந்த சஞ்சு சாம்சன்!

அதிக ரன்கள் குவித்து சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

மும்பைக்கு எதிராக சதமடித்த முதல் சிஎஸ்கே வீரர்..! சஞ்சு சாம்சன் நிகழ்த்திய பல சாதனைகள்!

அதிகமாக தோல்வியடைந்து இருக்கிறேன்... வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த சஞ்சு சாம்சன்!
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

