மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

நாளை என்பது வரும், சூரியன் உதிக்கும்..! தோல்விக்குப் பின் ஹார்திக் பாண்டியா நம்பிக்கை!

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பேசியிருப்பதாவது...

News image

ஹார்திக் பாண்டியா. - படம்: எக்ஸ் / ஹார்திக் பாண்டியா.

Updated On :8 ஏப்ரல் 2026, 5:55 pm IST

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தோல்வியுற்ற பிறகு, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹார்திக் பாண்டியா, “நாளை என்பது வரும், சூரியன் உதிக்கும்” என நம்பிக்கையுடன் பேசியுள்ளார்.

மழையின் காரணமாக 11 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 150/3 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய மும்பை அணி 11 ஓவர்களில் 123/9 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு மிகுந்த விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. வைபவ் சூர்யவன்ஷி பும்ராவின் முதல் பந்தை சிக்ஸர் அடித்து ஆச்சரியப்படுத்தினார். தோல்விக்குப் பின் கேப்டன் ஹார்திக் பாண்டியா பேசியிருப்பதாவது:

பவர்பிளேவில் நாங்கள் சரியாக பந்துவீசவில்லை; எதிரணி நன்றாக விளையாடினார்கள். எங்களது பந்துவீச்சாளர்கள் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். பந்துவீச்சு அணியாக நாங்கள் சரியாக விளையாடவில்லை; இதில் பேட்டிங்கை குறைகூற மாட்டேன்.

இது டி20 கிரிக்கெட். இதில் எப்போதுமே சில பந்துகளை நன்றாக வீச வேண்டும். ஒரே ஓவரில் 27 ரன்கள், அந்த ஐந்து பந்துகள் குறித்து பேச வேண்டும். இதுமாதிரி நல்ல பந்துகளை வீசியிருந்தால் நாங்கள் போட்டியில் இருந்திருப்போம். தொடக்க வீரர்கள் எங்களை போட்டியில் இருந்து நீக்கிவிட்டார்கள்.

இந்தப் போட்டியில் நடந்த தவறுகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். நாளைக்கு காலை என்பது வரும், மீண்டும் சூரியன் உதிக்கும். அதனால், தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டு அடுத்த போட்டிக்கு நன்றாக தயாராக வேண்டும் என்றார்.

புள்ளிப் பட்டியலில் மும்பை அணி 3 போட்டிகளில் 2ல் தோல்வியுற்று ஏழாவது இடத்தில் இருக்கிறது. கடந்த 5 சீசன்களாக மும்பை அணி கோப்பை வெல்லாமலே இருக்கிறது.

கடந்த சீசனில் அரையிறுதிக்கு முன்னேறிய மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸுடன் தோல்வியுற்றது. 2020ல் கோப்பை வென்ற பிறகு தொடர் சறுக்கல்களைச் சந்தித்து வருகிறது.

Summary

The morning will come tomorrow, the sun will rise says Mumbai Captain Hardik Pandya.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.