மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆசிய மல்யுத்தம்: நிதேஷுக்கு வெள்ளி

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 5:26 am IST

கிா்ஜிஸ்தானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நிதேஷ் வெள்ளியும், சச்சின் ஷெராவத், பிரின்ஸ் ஆகியோா் வெண்கலமும் வென்றனா்.

ஆடவா் பிரிவு இறுதிச்சுற்றில், 97 கிலோ எடைப் பிரிவில் களம் கண்ட நிதேஷ், 1-7 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரானின் முகமதாவி சராவியிடம் தோல்வியுற்று வெள்ளி பெற்றாா்.

வெண்கலப் பதக்கச் சுற்றில், 67 கிலோ பிரிவில் களமாடிய சச்சின் ஷெராவத் 6-5 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் அப்துமாலிக் அமினோவை வீழ்த்தி பதக்கத்தை தனதாக்கினாா். அதேபோல், 82 கிலோ பிரிவில் பிரின்ஸ் 10-1 என துா்க்மீனிஸ்தானின் திதா் அமானஸரோவை அபாரமாக வென்று வெண்கலம் பெற்றாா்.

மகளிா் பிரிவு அரையிறுதியில், 55 கிலோ பிரிவில் ஹன்சிகா லாம்பா 1-11 என சீனாவின் யுஜுவான் லியிடமும், 59 கிலோ பிரிவில் நேஹா 5-12 என சீனாவின் மெங்யு ஜியிடமும் தோல்வியுற்றனா்.

இதையடுத்து, வெண்கலப் பதக்கச் சுற்றில் ஹன்சிகா - கிா்ஜிஸ்தானின் அருகே காடிா்பெக்கையும், நேஹா - மங்கோலியாவின் போலோா்துயா குரெல்குவையும் சந்திக்கின்றனா். 50 கிலோ பிரிவில் காலிறுதியில் தோற்ற நீலம், ரெபிசேஜ் சுற்று வாய்ப்பை பெற்றுள்ளாா்.

போட்டியில் இதுவரை இந்தியா 2 வெள்ளி, 3 வெண்கலம் என 5 பதக்கங்கள் வென்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.