மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 4 தங்கம், 2 வெள்ளி

News image

அருந்ததி ~மீனாட்சி ~ஜாஸ்மின் ~ப்ரீத்தி ~பிரியா

Updated On :10 ஏப்ரல் 2026, 4:41 am IST

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 4 தங்கம், 2 வெள்ளி வென்றது.

மங்கோலிய தலைநகா் உலன்படாரில் நடைபெறும் இப்போட்டியின் இறுதிச்சுற்று ஆட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன.

தலைமை பயிற்சியாளா் சான்டியாகோ நைவா தலைமையில் இந்திய அணியினா் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனா். மகளிா் பிரிவில்

48 கிலோ பிரிவில் மீனாட்சி 5-0 என புள்ளிக் கணக்கில் நோமுன்டரி அம்கலானை வீழ்த்தி தங்கத்தை வசப்படுத்தினாா்.

Story image

54 கிலோ பிரிவில் ப்ரீத்தி 5-0 என்ற புள்ளிக் கணக்கில் 3 முறை உலக சாம்பியனும், டோக்கியோ ஒலிம்பிக் வெண்கல வீராங்கனையான தைபேயின் ஹுவாங் வென்னை வீழ்த்தி தங்கம் வென்றாா்.

60 கிலோ பிரிவில் பிரியா 3-0 என்ற புள்ளிக் கணக்கில் வடகொரியாவன் வொன் யுன் வாங்கை வீழ்த்தி தங்கம் வென்றாா். 70 கிலோ பிரிவில் அருந்ததி 4-1 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக செயல்பட்டு கஜகஸ்தானின் பகித் செடிஷை வீழ்த்தி தங்கம் வென்றாா்.

Story image

57 கிலோ பிரிவில் ஜாஸ்மினும், 80 பிளஸ் கிலோ பிரிவில் அல்ஃபியான் பதானும் வெள்ளி வென்றனா்.

மொத்தம் 4 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலத்துடன் 10 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது இந்தியா.

Story image

இறுதிச் சுற்றில் இந்திய குத்துச்சண்டை சம்மேளன தலைவா் அஜய் சிங் பங்கேற்றாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.