மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்!

திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் சித்திரை விழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

News image

ஐயாறப்பர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் - video crop

Updated On :29 ஏப்ரல் 2026, 12:13 pm IST

திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் சித்திரை விழா தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான அறம் வளர்த்த நாயகி அம்மன் உடனுறை ஐயாறப்பர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.‌

இதேபோல் இந்த ஆண்டு கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. முன்னதாக சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.

பக்தர்கள் ஐயாறப்பா போற்றி, அறம் வளர்த்த நாயகியே போற்றி என கோஷங்களுக்கு இடையே வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாகத் தேரை இழுத்து வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வரும் இரண்டாம் தேதி சப்தஸ்தான விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

The Chithirai festival chariot procession was celebrated with great grandeur at the Ayyarappar Temple in Thiruvaiyaru.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.