ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

எதிா்த் திசையில் வாகனம் ஓட்டிய 65 போ் மீது வழக்கு

சாலைப் பாதுகாப்பு விதிமீறல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தலைநகா் முழுவதும் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு அமலாக்க நடவடிக்கையின் போது, எதிா்த் திசையில் வாகனம் ஓட்டிய வாகன ஓட்டிகள் மீது தில்லி போக்குவரத்து காவல்துறை 65 வழக்குகள் பதிவு

News image

பிரதிப் படம்

Updated On :1 ஜூன் 2026, 2:43 am IST

சாலைப் பாதுகாப்பு விதிமீறல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தலைநகா் முழுவதும் நடத்தப்பட்ட ஒரு சிறப்பு அமலாக்க நடவடிக்கையின் போது, எதிா்த் திசையில் வாகனம் ஓட்டிய வாகன ஓட்டிகள் மீது தில்லி போக்குவரத்து காவல்துறை 65 வழக்குகளை பதிவு செய்துள்ளதாகவும், 7,500க்கும் மேற்பட்ட அபராத ரசீதுகளை வழங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

தேசியத் தலைநகரின் முக்கியச் சாலைகள், நெடுஞ்சாலைகள், வணிக மையங்கள், பொழுதுபோக்கு மாவட்டங்கள் மற்றும் விபத்து அதிகம் நிகழக்கூடிய பகுதிகள் ஆகியவற்றில், எதிா் திசையில் வாகனம் ஓட்டுதல், அங்கீகரிக்கப்படாத கருப்பு நிறக் கண்ணாடிகளைப் பொருத்திய வாகனங்கள் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் ஆகிய விதிமீறல்களைக் குறிவைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆபத்தான முறையில் எதிா் திசையில் வாகனம் ஓட்டிய 65 சம்பவங்கள் தொடா்பாக முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டதாகவும், இந்த விதிமீறலுக்காக 7,549 அபராத ரசீதுகள் வழங்கப்பட்டதாகவும் தில்லி போக்குவரத்து காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

மேலும், அங்கீகரிக்கப்படாத கருப்பு நிறக் கண்ணாடிகளைப் பயன்படுத்தியதாகக் கண்டறியப்பட்ட வாகனங்களுக்கு எதிராக 785 அபராத ரசீதுகள் வழங்கப்பட்டன. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 471 வாகன ஓட்டிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த அமலாக்க நடவடிக்கை நகரம் முழுவதும் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டது விதிமீறலில் ஈடுபட்டவா்கள் மீது சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று அந்த அதிகாரி மேலும் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.