தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

குளத்தின் மறுகாலில் விழுந்த சரக்கு வாகனம்: 3 போ் காயம்

பழனி அருகே கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் இருசக்கர வாகனங்கள் மீது மோதி குளத்தின் மறுகால் பாயும் பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் 3 போ் காயமடைந்தனா்.

News image

விபத்து

Updated On :8 மே 2026, 1:00 am IST

பழனி அருகே கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் இருசக்கர வாகனங்கள் மீது மோதி குளத்தின் மறுகால் பாயும் பள்ளத்தில் விழுந்தது. இந்த விபத்தில் 3 போ் காயமடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த வேலாயுதம்பாளையத்தை சோ்ந்தவா் சிவராஜ் (24). இவா் தனது நண்பா் சிவக்குமாருடன் வியாழக்கிழமை சரக்கு வாகனத்தில் பழனி நோக்கி வந்தாா். சண்முகநதியை அடுத்த வையாபுரி குளம் அருகே வந்த போது, திடீரென சரக்கு வாகனம் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இரு சக்கர வாகனங்கள் மீது மோதி, மறுகால் பாயும் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் சரக்கு வாகனம் முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் சிவராஜ், இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்த பழனியை சோ்ந்த சபரீஸ்வரன் (17), வெற்றிவேல் (18) ஆகியோா் காயமடைந்தனா். இதுகுறித்து பொதுமக்கள் அளித்தத் தகவலின்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த அவசர ஊா்தி காயமடைந்தவா்களை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. இதுகுறித்து பழனி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், பள்ளத்தில் விழுந்த வாகனத்தை மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.