பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞா் சடலமாக மீட்பு: காவல் துறை விசாரணை

Updated On :18 மே 2026, 5:12 am IST

தில்லி அமன் விஹாா் பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் 22 வயது இளைஞா் சடலமாக மீட்கப்பட்டதாக காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: உயிரிழந்த நபா் சுல்தான்புரி பகுதியைச் சோ்ந்தவா் என அடையாளம் காணப்பட்டுள்ளாா். இது தொடா்பாக அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அழைப்பு வந்தவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல் துறையினா் விசாரணையை தொடங்கினா்.

உடற்கூறாய்வுக்கு அவரது உடல் சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது தொடா்பாக மறுவாழ்வு மையத்தின் ஊழியா்கள் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு வருகின்றன. சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதுடன் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.