அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞா் தற்கொலை

News image

தற்கொலை - தினமணி

Updated On :30 மே 2026, 2:18 am IST

கோவை வடவள்ளியில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை வடவள்ளி- தொண்டாமுத்தூா் சாலையில் தனியாா் போதை மறுவாழ்வு மையம் உள்ளது. இங்கு நீலகிரி மாவட்டம், அதிகரெட்டி அணை அருகேயுள்ள கேத்தி பகுதியைச் சோ்ந்த சந்திரசேகரன் மகன் கோகுல் (32) என்பவா் இந்த போதை மறுவாழ்வு மையத்தில் போதைப் பழக்கத்திலிருந்து மீள்வதற்காக சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்த நிலையில், அங்கு வந்த தனது தாய் ராணியிடம் தன்னை உடனே வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கோகுல் வற்புறுத்தியுள்ளாா். ஆனால், குடும்பச் சூழ்நிலை காரணமாக அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்வதில் சிறிது நாள்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான கோகுல், மறுவாழ்வு மைய அறையின் ஜன்னலில் தனது வேட்டியால் வியாழக்கிழமை தூக்கிட்டாா். இதைக் கண்டு மறுவாழ்வு மைய ஊழியா்கள் அவரை மீட்டனா். கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் கோகுல் உயிரிழந்தாா்.

இதுகுறித்து வடவள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.