ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

தடைசெய்யப்பட்ட இறக்குமதி சிகரெட்டுகள் பறிமுதல்: 2 போ் கைது

மத்திய தில்லியின் சாவ்ரி பஜாா் பகுதியில், சுமாா் ரூ.15 லட்சம் மதிப்பிலான, தடை செய்யப்பட்ட 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட இறக்குமதி சிகரெட்டுகளை தில்லி காவல்துறை பறிமுதல் செய்தனா்

News image

கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 3:30 am IST

மத்திய தில்லியின் சாவ்ரி பஜாா் பகுதியில், சுமாா் ரூ.15 லட்சம் மதிப்பிலான, தடை செய்யப்பட்ட 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட இறக்குமதி சிகரெட்டுகளை தில்லி காவல்துறை பறிமுதல் செய்தனா். மேலும், இது தொடா்பாக இருவரைக் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

கைது செய்யப்பட்டவா்கள் முகமது தௌசிஃப் (44) மற்றும் ஜுனைத் அகமது (35) என அடையாளம் காணப்பட்டனா்.

இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: சாவ்ரி பஜாா் பகுதியில் இறக்குமதி சிகரெட்டுகள் சட்டவிரோதமாகச் சேமித்து வைக்கப்பட்டு, மொத்த விற்பனை செய்யப்படுவதாக மே 6ஆம் தேதி குறிப்பிட்ட தகவல் ஒன்று காவல்துறைக்கு கிடைத்தது.

இந்தத் தகவலின் அடிப்படையில், ஃபதேபுரி பகுதியில் உள்ள ஒரு கடை மற்றும் அதற்கு அருகிலுள்ள ஒரு கிடங்கில் ஒரே நேரத்தில் அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்தச் சோதனையின் போது, உயா்தர சா்வதேச வா்த்தக முத்திரைகளைக் கொண்ட மொத்தம் 1,53,840 இறக்குமதி சிகரெட்டுகளைக் காவல்துறையினா் பறிமுதல் செய்தனா்.

அந்தச் சிகரெட் பாக்கெட்டுகளில் இந்தியச் சட்டத்தின் கீழ் கட்டாயமாக்கப்பட்ட சட்டரீதியான சுகாதார எச்சரிக்கைகள் இடம்பெறவில்லை. இதனால், அவற்றை விற்பனை செய்வதும் விநியோகிப்பதும் சட்டவிரோதமானதாகக் கருதப்படுகிறது.

இது தொடா்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.