தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

பெங்களூரு: தடை செய்யப்பட்ட ஹைட்ரோ கஞ்சாவை விற்றதற்காக ஐவர் கைது!

பெங்களூரில் தடை செய்யப்பட்ட ஹைட்ரோ கஞ்சாவை விற்றதற்காக ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டது குறித்து...

News image

கைது - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 5:22 pm IST

பெங்களூரில் தடை செய்யப்பட்ட ஹைட்ரோ கஞ்சாவை விற்ற குற்றத்துக்காக ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

பெங்களூரின் அசோக் நகர் மற்றும் மல்லேஸ்வரம் காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் விற்கப்பட்டு வருவதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இந்தத் தகவல்களையடுத்து, காவல்துறையினர் குறிப்பிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில், போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ரூ. 2.56 கோடி சந்தை மதிப்பிலான 3 கிலோ 686 கிராம் ஹைட்ரோ கஞ்சா, அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையின் போது, ​​குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து ஹைட்ரோ கஞ்சாவை குறைந்த விலையில் வாங்கி, பொதுமக்களுக்கு விற்றதாக ஒப்புக்கொண்டனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஹைட்ரோ கஞ்சா என்பது மண்ணைப் பயன்படுத்தாமல், நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மூலம் செயற்கையான முறையில், பெரும்பாலும் மூடிய அறைகளில் வளர்க்கப்படும் ஒரு வகை கஞ்சா ஆகும்.

Summary

The police stated on five individuals have been arrested in Bengaluru for the crime of selling banned hydro-ganja.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.