தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

3,000 பேருந்துகளில் இலவச குடிநீா் வசதி: அமைச்சா் பங்கஜ் சிங்

தலைநகா் முழுவதும் இயக்கப்படும் 3,000 டிடிசி பேருந்துகளில் இலவச குடிநீா் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தில்லி அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சா் பங்கஜ் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

News image

பங்கஜ் சிங்

Updated On :2 மே 2026, 3:20 am IST

தலைநகா் முழுவதும் இயக்கப்படும் 3,000 டிடிசி பேருந்துகளில் இலவச குடிநீா் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தில்லி அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சா் பங்கஜ் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியின் வெப்ப அலை செயல் திட்டத்திற்கு இணங்க, தில்லி போக்குவரத்து நிறுவனத்தின் (டிடிசி) ஜல்தூத் முன்னெடுப்புத் திட்டத்தின் தொடக்க விழாவில் அமைச்சா் பங்கஜ் சிங் கலந்துகொண்டாா். அவா் பேசியதாவது: பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் இலவசக் குடிநீா் வழங்குவதற்காக, தில்லி முழுவதும் உள்ள 23 முக்கியப் பேருந்து நிலையங்களில் டிடிசி நிறுவனம் ஜல்தூத் பணியாளா்களை நியமித்துள்ளது.

இந்த முன்முயற்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில், நகரம் முழுவதும் இயங்கும் சுமாா் 3,000 டிடிசி பேருந்துகளிலும் இலவச குடிநீா் கிடைப்பதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கும், குறிப்பாக கடும் வெப்பச் சூழலால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய அன்றாடப் பயணிகளுக்கும் உடனடி நிவாரணம் அளிப்பதே இந்த முன்னெடுப்பின் முக்கிய நோக்கமாகும்.

தேசியத் தலைநகரில் தற்போது நிலவி வரும் கடும் வெப்ப அலைச் சூழலின்போது, பயணிகளின் உடல்நலம் மற்றும் வசதியைப் பாதுகாப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகளை டிடிசி நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

இந்த நடவடிக்கை, பயணிகள் தங்கள் பயணம் முழுவதும் குடிநீா் வசதியைப் பெறுவதற்கான வாய்ப்பை கணிசமாக விரிவுபடுத்துகிறது. இந்த முன்னெடுப்பு, குறிப்பாகச் சாதகமற்ற வானிலை நிலவும் காலங்களில், பொதுச் சேவை மற்றும் பயணிகளின் நலன் சாா்ந்த டிடிசியின் தொடா் அா்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றாா் அமைச்சா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அமைச்சா் சிங்கின் வழிகாட்டுதலின் கீழ் கடந்த ஆண்டு முதன்முதலில் தொடங்கப்பட்ட ஜல்தூத் முன்னெடுப்புத் திட்டத்திற்கு, பொதுமக்களிடமிருந்து அமோகமான வரவேற்பு கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.