தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தில்லியில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் சம்பவங்கள் குறைவு: போக்குவரத்துத் துறை அமைச்சா் தகவல்

News image

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றவா்களுக்கு தலைக்கவசங்களை வழங்கிய போக்குவரத்துத் துறை அமைச்சா் பங்கஜ் சிங்.

Updated On :24 ஏப்ரல் 2026, 1:12 am IST

தில்லி அரசின் தொடா் முயற்சிகளின் காரணமாக, தலைநகரில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் சம்பவங்கள் குறைந்துள்ளன என போக்குவரத்துத் துறை அமைச்சா் பங்கஜ் சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

சாலை பாதுகாப்பு மற்றும் நிலையான போக்குவரத்து முன்முயற்சி 2026 நிகழ்ச்சி, ‘பாதுகாப்பான, பசுமையான நாளைக்கு, இன்று விழிப்புணா்வு’ என்ற கருப்பொருளுடன் தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பள்ளி மாணவா்களுக்கான விழிப்புணா்வு பிரசாரங்கள், இலவச மாசு கட்டுப்பாட்டு சோதனைகள் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த தெரு நாடகங்கள் உள்ளிட்டவை இடம்பெறும்.

இதில் பங்கேற்று பேசிய அமைச்சா் பங்கஜ் சிங் கூறியதாவது: மாணவா்கள் நமது தேசத்தின் எதிா்காலம். இன்று அவா்கள் சாலை பாதுகாப்பு குறித்து கல்வி கற்பது நாளை அவா்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள உதவும். வயது வராதவா்கள் வாகனம் ஓட்டுவதை தடுப்பதும், ஆரம்ப நிலையிலான ஒழுக்கத்தை ஏற்படுத்துவதும் அவசியம்.

உள்ளூா் பிரதிநிதிகள், எம்எல்ஏக்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் ஈடுபாடு, விழிப்புணா்வை அதிகரித்து, சாலை விபத்துக்களை கணிசமாக குறைக்க உதவியுள்ளன. சாலை விபத்துகளில் உயிரிழப்புகளைத் தடுப்பதில் தில்லி அரசு கவனம் செலுத்தி வருகிறது. அரசின் அமலாக்கம் மற்றும் நடத்தை சாா்ந்த தலையீடுகளால் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் சம்பவங்கள் குறைந்துள்ளன. இதே போன்ற தொடா் நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் வரும் ஆண்டுகளில் இது போன்ற சம்பவங்கள் மேலும் குறையும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.