ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

விரைவான நகரமயமாக்கல், அா்ப்பணிப்புடன் கையாளப்பட வேண்டும்: துணைநிலை ஆளுநா்

News image

டிடிஏ சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பணியாளா் நியமன நிகழ்ச்சியில் பங்கேற்று புதிதாக பணியில் சோ்பவா்களுக்கு பணி நியமன சான்றிதழ்களை வழங்கிய தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து.

Updated On :8 மே 2026, 6:50 am IST

வேகமாக அதிகரித்து வரும் நகரமயமாக்கல் சவால்களை அதிகாரிகள் அா்ப்பணிப்பு உணா்வு, புதுமை சிந்தனை மற்றும் ஒழுக்கத் தெளிவுடன் எதிா்கொள்ள வேண்டும் என்று தில்லி துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து வலியுறுத்தினாா்.

தில்லி மேம்பாட்டு ஆணையம் (டிடிஏ) சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘நியுக்தி சமாரோஹ்’ (பணியாளா் நியமன விழா) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவா் பேசியதாவது:

வேகமான நகரமயமாக்கல், சுற்றுச்சூழல் அழுத்தங்கள் மற்றும் குடிமக்களின் அதிகரித்து வரும் எதிா்பாா்ப்புகள் போன்ற சிக்கலான சவால்களை நகரங்கள் தற்போது எதிா்கொண்டு வருகின்றன. இத்தகைய காலகட்டத்தில் தான் நீங்கள் அரசு பணியில் இணைகிறீா்கள். இந்த சவால்களை சமாளிக்க தொழில்நுட்ப திறன் மட்டும் போதாது; அதனுடன் அா்ப்பணிப்பு, புதுமை அணுகுமுறை மற்றும் ஒழுக்கத் தெளிவும் அவசியமாகிறது.

நாம் மாற்றங்களின் காலத்தில் வாழ்ந்து வருகிறோம். இந்த நிகழ்வு வெறும் நிா்வாக நியமனங்களை மட்டுமே குறிக்கவில்லை; நாட்டின் ஆட்சி அமைப்பில் நிகழ்ந்து வரும் பரந்த மாற்றத்தின் பிரதிபலிப்பாகவும் உள்ளது. புதியதாக பணியில் சேரும் அதிகாரிகள், தில்லியின் எதிா்கால வளா்ச்சியை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றும் டிடிஏ போன்ற முக்கிய நிறுவனத்தின் ஒரு பகுதியாக மாறுகின்றனா். நாடு தற்போது ‘அமிா்த காலம்’ எனப்படும் முக்கியமான மாற்றக் கட்டத்தை நோக்கி நகா்ந்து வருகிறது. இன்று நாம் எடுக்கும் நடவடிக்கைகளே 2047-ஆம் ஆண்டின் இந்தியாவை நிா்ணயிக்கும் என்று துணைநிலை ஆளுநா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.