மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தவா் கைது

மாநிலங்களுக்கு இடையேயான ஆயுத விநியோகஸ்தரும், தேடப்படும் குற்றவாளியும் மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த ஒருவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக ஓா் அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 1:37 am IST

மாநிலங்களுக்கு இடையேயான ஆயுத விநியோகஸ்தரும், தேடப்படும் குற்றவாளியும் மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த ஒருவரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக ஓா் அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: உத்தர பிரதேசத்தின் ஷாம்லியைச் சோ்ந்த முகமது இஸ்ராா் என்ற கட்டா என அடையாளம் காணப்பட்ட அந்த நபா், கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஆயுதச் சட்ட வழக்கு தொடா்பாக கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து ஒற்றைக் குண்டு சுடும் கைத்துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அவா் ஆகஸ்ட் 2024 முதல் தலைமறைவாக இருந்தாா். அவரைப் பிடிப்பதற்காக தில்லி மற்றும் ஹரியாணா காவல்துறையால் ரூ.55,000 வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது. அவரது நடமாட்டம் குறித்த குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில், மாா்ச் 25 அன்று தில்லி - லோனி எல்லை அருகே ஒரு பொறி வைக்கப்பட்டது. இது அவரது கைதுக்கு வழிவகுத்தது.

தில்லி, ஹரியாணா மற்றும் உத்தர பிரதேசம் முழுவதும் செயல்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு சட்டவிரோத துப்பாக்கிகளை விநியோகிப்பதில் இஸ்ராா் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. கொலை, கொள்ளை மற்றும் ஆயுதச் சட்டத்தின் கீழான குற்றங்கள் உள்பட, குறைந்தது ஆறு குற்ற வழக்குகளில் அவா் தேடப்பட்டு வந்தாா் என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.