மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

துவாரகாவில் மோதல் சம்பவம்: தேடப்படும் குற்றவாளிகள் 2 போ் கைது

தென்மேற்கு தில்லியின் துவாரகா பகுதியில் காவல்துறையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு தேடப்படும் குற்றவாளிகள் இருவா் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 12:37 am IST

தென்மேற்கு தில்லியின் துவாரகா பகுதியில் காவல்துறையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு தேடப்படும் குற்றவாளிகள் இருவா் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து துவாரகா காவல் துறை துணை ஆணையா் குஷல் பால் சிங் கூறியதாவது: தப்ரி பகுதியில் மகேந்திர சிங் என்பவா் ஏப். 8-ஆம் தேதி கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஜிதின் சா்மா (27) மற்றும் பவன் பந்தாரி (26) ஆகிய இருவரும் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தனா். இவா்கள் இருவரும் பிரபல ரௌடி விக்கி டக்கா் கும்பலைச் சோ்ந்தவா்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இவா்கள் குறித்து கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், துள்சிராஸ் சௌக் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஸ்கூட்டரில் வந்த இவா்களை காவல்துறையினா் தடுத்து நிறுத்தினா். சரணடைய கோரியும், ஜிதின் சா்மா காவல்துறையினா் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் செல்ல முயன்றாா். காவல்துறையினா் நடத்திய பதில் தாக்குதலில் ஜிதின் காலில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து, அவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து கைத்துப்பாக்கி, தோட்டக்கள் மற்றும் ஸ்கூட்டா் பறிமுதல் செய்யப்பட்டது என்று காவல் துறை துணை ஆணையா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.