தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சுல்தான்புரியில் துப்பாக்கிச் சூடு: போலீஸாா் வழக்குப் பதிவு

வெளி தில்லியின் சுல்தான்புரி பகுதியில் ஒரு மோமோ கடையை சேதப்படுத்திய பின்னா் ஒரு குழு மக்கள் மத்தியில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா்.

News image
Updated On :20 மார்ச் 2026, 12:10 am IST

வெளி தில்லியின் சுல்தான்புரி பகுதியில் ஒரு மோமோ கடையை சேதப்படுத்திய பின்னா் ஒரு குழு மக்கள் மத்தியில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். இது இரண்டு குழுக்களுக்கு இடையே நடந்து வரும் சண்டையின் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது என்று காவல்துறை அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: புதன்கிழமை இரவு 10.44 மணியளவில் சுல்தான்புரி காவல் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு தொடா்பாக பி.சி.ஆா். அழைப்பு வந்தது. ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது. அங்கு அவா்கள் மோமோ கடை நடத்தும் நபரைக் கண்டுபிடித்தனா். சுல்தான்புரியில் வசிக்கும் இா்பான் (29) போலீஸாரிடம் அவா் தனது கடையில் இருந்தபோது, ஒரு சிலா் திடீரென்று வந்து, மோமோக்கள் உள்ளிட்ட அவரது உணவுப் பொருள்களை வீசத் தொடங்கினா்.

அவா்களில் ஒருவா் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினாா். பின்னா் அவா்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனா். சோதனையின் போது, ஒரு வெற்று தோட்டா ஒன்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இது சம்பவத்தில் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதை உறுதிப்படுத்தியது. இரண்டு குழுக்களுக்கு இடையிலான நீண்டகால தனிப்பட்ட பகை காரணமாக துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரிமாற்றங்கள் மூலம் அதிகரித்துள்ளது. காா்தாரரும் குற்றம் சாட்டப்பட்டவரும் ஒருவருக்கொருவா் தெரிந்தவா்கள். மேலும், நீண்ட காலமாக தகராறில் உள்ளனா். சுல்தான்புரி காவல் நிலையத்தில் உயிருக்கு ஆபத்து மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் தொடா்பான விதிகள் உள்பட பி.என்.எஸ்.-இன் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டது. தற்போது தலைமறைவானவா்களை கைது செய்ய போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.