அமெரிக்காவில் அதிபரின் விருந்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிலிருந்து டொனால்ட் டிரம்ப் பாதுகாப்பாக மீட்கப்பட்டது குறித்து பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "வாஷிங்டன் டிசி விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு தாக்குதலிலிருந்து அதிபர் டிரம்ப்பும் அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலானியா டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் ஆகியோர் பாதுகாப்பாகவும் காயமின்றியும் தப்பித்தனர் என்பதை அறிந்து நிம்மதி அடைந்தேன்.
அவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. அது கண்டிப்பாக கண்டிக்கப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி-யில் வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அதிபர் டிரம்ப் இரவு விருந்து அளித்தார். இந்த இரவு விருந்தில் டிரம்ப், அவரது மனைவி மெலானியா டிரம்ப், துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உள்ள்பட சுமார் 2,600 பேர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், இரவு விருந்தில் அடையாளம் தெரியாத ஒருவர், திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதனைத் தொடர்ந்து, விருந்தில் பங்கேற்ற அனைவரையும் பாதுகாப்புப் படையினர் பத்திரமாக வெளியேற்றினர். இதனிடையே, துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரையும் கைது செய்தனர். இந்த விருந்தில் யாருக்கும் எந்தக் காயமும் ஏற்படவில்லை.
விருந்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோதிலும், விருந்தினைத் தொடரலாம் என்றே டிரம்ப் கூறியுள்ளார். இருப்பினும், பாதுகாப்பு அதிகாரிகளின் வலியுறுத்தலின்பேரில், விருந்தை பின்னர் மீண்டும் நடத்தவுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, சம்பவத்தின்போது பாதுகாப்பு அதிகாரிகளின் துரிதமான மற்றும் துணிகரமிக்க செயலையும் டிரம்ப் பாராட்டினார்.
Summary
Violence Has No Place In Democracy: PM Modi On Shooting At Trump Event
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
டிரம்ப்பின் சர்ச்சைப் பேச்சுகளுக்கு மோடி ஏன் மௌனம் சாதிக்கிறார்? கார்கே கண்டனம்!

மோடியுடன் 40 நிமிடங்கள் உரையாடிய டிரம்ப்! பேசியது என்ன?

டிரம்ப்பின் கட்டுப்பாட்டில் பிரதமர் மோடி! - அசாம் பிரசாரத்தில் ராகுல் கடும் தாக்கு!

இந்தியாவின் தரவுகளை டிரம்ப்பிடம் ஒப்படைத்த பிரதமர் மோடி: ராகுல் காந்தி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

