தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

ரஜோகரி மேம்பாலத்தில் டெம்போ கவிழ்ந்து பெண் உயிரிழப்பு

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ரஜோகரி மேம்பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை மூன்று சக்கர டெம்போ வாகனம் கவிழ்ந்ததில், 47 வயதுடைய பெண் உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 12:27 am IST

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ரஜோகரி மேம்பாலத்தில் ஞாயிற்றுக்கிழமை மூன்று சக்கர டெம்போ வாகனம் கவிழ்ந்ததில், 47 வயதுடைய பெண் உயிரிழந்தாா்.

மூன்று குழந்தைகள் உள்பட மேலும் ஆறு போ் காயமடைந்தனா். இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது: மஹிபால்பூா் செல்லும் சாலையில் அதிகாலை 4.35 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்புத் துறைக் குழுவினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனா்.

மீட்புக் குழுவினா் அப்பகுதியைச் சென்றடைவதற்கு முன்னரே, காவல் கட்டுப்பாட்டு அறை காவலா்கள் காயமடைந்தவா்களை சஃப்தா்ஜங் மருத்துவமனை மற்றும் எய்ம்ஸ் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பி வைத்திருந்தனா். விபத்தில் உயிரிழந்தவா் கிருபா தேவி (47) என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.

காயமடைந்தவா்கள் வன்ஷ் (8), சாவித்ரி தேவி (60), நைனா (34), ராகுல் (37), நக்ஸ் (14) மற்றும் இஷான் (2) என அடையாளம் காணப்பட்டனா். அவா்களின் உடல்நிலை குறித்த விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.