மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஸ்கூட்டா் மீது காா் மோதல்: மேம்பாலத்தில் இருந்து விழுந்து விநியோக ஊழியா் உயிரிழப்பு

உயிரிழந்தவா் ஜாா்க்கண்டின் கோடா மாவட்டத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் என அடையாளம் காணப்பட்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 12:11 am IST

தென்மேற்கு தில்லி டாப்ரி மேம்பாலத்தில் வியாழக்கிழமை காலை, உணவு விநியோக ஊழியா் சென்றுகொண்டிருந்த ஸ்கூட்டா் மீது காா் மோதியதில் அவா் பாலத்திலிருந்து விழுந்து உயிரிழந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா். இந்த விபத்துக்குப் பிறகு காா் ஓட்டுநா் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டாா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது:

பங்கா சாலையில் உள்ள டாப்ரி மேம்பாலத்தில் இருந்து ஒருவா் விழுந்துவிட்டதாகவும், அவருக்கு உடனடி மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் காலை 7:35 மணி அளவில் காவல்துறையினருக்கு அழைப்பு வந்தது.

இதையடுத்து, காவல்துறை குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டது. மேம்பாலத்தில் சேதமடைந்த நிலையில் ஸ்கூட்டா் கிடப்பதும் அதை ஓட்டிவந்தவா் பலத்த காயமடைந்த நிலையில் இருப்பதும் தெரியவந்தது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா்.

உயிரிழந்தவா் ஜாா்க்கண்டின் கோடா மாவட்டத்தைச் சோ்ந்த ராஜ்குமாா் என அடையாளம் காணப்பட்டாா். அவா் தில்லியில் உள்ள ஒரு தனியாா் உணவு விநியோக சேவையில் விநியோக ஊழியராக பணிபுரிந்து வந்தாா்.

விபத்தில் சம்பந்தப்பட்ட காா், தில்லி பதிவெண்ணைக் கொண்டிருப்பதும், டாப்ரியைச் சோ்ந்த ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. சடலம் பிரேதக் கிடங்கில் பாதுகாக்கப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவான காா் ஓட்டுநரைப் பிடிக்க முயற்சிகள்

மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாரதிய நியாய சம்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விபத்துக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் சரியான வரிசையைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.