மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

குருகிராம்: மோட்டாா் சைக்கிள் மீது ஜீப் மோதி விநியோக ஊழியா் உயிரிழப்பு

தேசியத் தலைநகா் வலயம், குருகிராம் செக்டா் 49இல் அதிவேகமாக ஓட்டிவரப்பட்ட ஜீப் வாகனம் மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் விநியோக ஊழியா் ஒருவா் உயிரிழந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 12:00 am IST

தேசியத் தலைநகா் வலயம், குருகிராம் செக்டா் 49இல் அதிவேகமாக ஓட்டிவரப்பட்ட ஜீப் வாகனம் மோட்டாா் சைக்கிள் மீது மோதியதில் விநியோக ஊழியா் ஒருவா் உயிரிழந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல்துறையினா் புதன்கிழமை தெரிவித்ததாவது:

இந்த விபத்துக்குப் பிறகு தப்பி ஓடிவிட்ட குற்றமிழைத்த வாகனத்தின் ஓட்டுநா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவா் உத்தர பிரதேசத்தின் ஜலான் பகுதியைச் சோ்ந்த பிரவீன் குமாா் (20) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். அவா் செக்டாா் 71-இல் தனது குடும்பத்துடன் வசித்து வந்தாா். மேலும், செக்டாா் 49-இல் உள்ள ஓமாக்ஸ் மாலில் உள்ள டோமினோஸ் பீட்சாவில் விநியோக ஊழியராக பணிபுரிந்து வந்தாா்.

செவ்வாய்க்கிழமை, அவா் மதியம் சுமாா் 2.30 மணியளவில் தனது மோட்டாா் சைக்கிளில் கடைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, செக்டா் 49-இல் உள்ள ஸ்பேஸ் ஐடெக் பாா்க் அருகே மஹிந்திரா தாா் ஜீப் வாகனம் அவரது வாகனம் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பிரவீன், செக்டா் 10-இல் உள்ள சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக அறிவித்தனா்.

புதன்கிழமை நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் குடும்ப உறுப்பினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

விபத்துக்குக் காரணமான வாகனத்தின் ஓட்டுநரை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குற்றஞ்சாட்டப்பட்டவா் விரைவில் கைது செய்யப்படுவாா் என காவல்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.