தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சிறுபான்மையினா் ஆணையத்தில் தலைவா், உறுப்பினா் பணியிடங்கள் காலி: தில்லி அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு!

தில்லி மாநில சிறுபான்மையினா் ஆணையத்தில் தலைவா் மற்றும் உறுப்பினா் பதவிகளில் உள்ள காலியிடங்கள் 2023 முதல் ஏன் நிரப்பப்படவில்லை என்று விளக்கமளிக்குமாறு தில்லி உயா் நீதிமன்றமானது அரசிடம் கேட்டுள்ளது.

News image

தில்லி உயர் நீதிமன்றம்​

Updated On :27 ஏப்ரல் 2026, 12:04 am IST

தில்லி மாநில சிறுபான்மையினா் ஆணையத்தில் தலைவா் மற்றும் உறுப்பினா் பதவிகளில் உள்ள காலியிடங்கள் 2023 முதல் ஏன் நிரப்பப்படவில்லை என்று விளக்கமளிக்குமாறு தில்லி உயா் நீதிமன்றமானது அரசிடம் கேட்டுள்ளது.

முடிந்தவரை விரைவில் காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்று சட்டம் குறிப்பிடுவதால் மட்டுமே, அப்பதவிகளை காலவரையின்றி காலியாக வைத்திருக்க முடியாது என்று தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி தேஜஸ் காரியா ஆகியோா் அடங்கிய அமா்வு குறிப்பிட்டதுடன், நியமன செயல்முறையைத் தொடங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் ஆணையத்தில் உள்ள காலியிடங்கள் நிரப்பப்படும் காலக்கெடு ஆகியவற்றை வெளிப்படுத்தும் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு தில்லி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சாலிக் சந்த் ஜெயின் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் ஏப்ரல் 22 அன்று நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

மனுதாரரின் வழக்குரைஞா், ஆகஸ்ட் 24, 2023 முதல் ஆணையத்தில் தலைவா் மற்றும் உறுப்பினா் பதவிகளில் யாரும் நியமிக்கப்படவில்லை என்று தெரிவித்தாா்.

இந்த மனு தொடா்பாக தில்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பிய நீதிமன்றம், முதன்மைச் செயலாளா்கூடுதல் அல்லது தலைமைச் செயலாளா் பதவிக்குக் குறையாத தகுந்த அதிகாரியால் உறுதிசெய்யப்பட்ட ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்து, 24.08.2023 முதல் ஆணையத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் ஏன் நிரப்பப்படவில்லை என்பதை விளக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியது. ரிட் மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின்படி, 24.08.2023 முதல் இன்று வரை, அதாவது மிக நீண்ட காலமாக, ஆணையத்தில் எந்த உறுப்பினரோ அல்லது தலைவரோ நியமிக்கப்படவில்லை.

சட்டத்தின் 4 ஆம் பிரிவின் துணைப் பிரிவு 5, காலிப் பணியிடத்தை முடிந்தவரை விரைவில் அரசாங்கம் நிரப்ப வேண்டும் என்று கூறுவதால் மட்டுமே, அந்தக் காலிப் பணியிடத்தை நிரந்தரமாக நிரப்பாமல் வைத்திருக்க முடியும் என்று அா்த்தமாகாது, என்று குறிப்பிட்ட தில்லி உயா்நீதிமன்றம் இந்த வழக்கை ஆகஸ்ட் 12 அன்று மேலும் விசாரணைக்கு பட்டியலிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.