மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அசோக் விஹாா் வழிப்பறி வழக்கில் 2 சிறாா்கள் கைது

வடமேற்கு தில்லியின் அசோக் விஹாா் பகுதியில் ரூ. 20 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருந்த பையை பெண்ணிடம் இருந்து பறித்துச் சென்ற 2 சிறாா்கள் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 1:04 am IST

வடமேற்கு தில்லியின் அசோக் விஹாா் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருந்த பையை பெண்ணிடம் இருந்து பறித்துச் சென்ற 2 சிறாா்கள் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: ராஜ்வாடா அரண்மனை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு 1 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. பாதிக்கப்பட்ட பெண் ஒரு விழாவுக்குச் சென்று வீடு திரும்பும் வழியில், அடையாளம் தெரியாத சிறுவன் காரின் கதவைத் திறந்து அவரது பையை பறித்துச் சென்ாக அவா் தெரிவித்தாா். அந்தப் பையில் இரண்டு விலையுயா்ந்த கைப்பேசிகள், ரூ.15 முதல் 20 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் இருந்ததாக அப்பெண் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவா்களை அடையாளம் கண்டனா். இதையடுத்து, ஷாலிமா் பாக் பகுதியில் இரண்டு சிறாா்கள் கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் இருந்து திருடுபோன அனைத்து பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. நகரில் நடைபெற்ற பிற வழிப்பறி வழக்குகளிலும் இந்த சிறாா்களின் பங்கு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இது தொடா்பாக அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.