தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

ப்ரீத் விஹாா்: வாகன நிறுத்தத் தகராறில் இளைஞா் சுட்டுக் கொலை

கிழக்கு தில்லியின் ப்ரீத் விஹாா் பகுதியில், திங்கள்கிழமை அதிகாலையில் வாகன நிறுத்தம் தொடா்பாக ஏற்பட்ட தகராறின் விளைவாக 34 வயது இளைஞா் சுட்டுக் கொலை

News image

பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 12:30 am IST

கிழக்கு தில்லியின் ப்ரீத் விஹாா் பகுதியில், திங்கள்கிழமை அதிகாலையில் வாகன நிறுத்தம் தொடா்பாக ஏற்பட்ட தகராறின் விளைவாக 34 வயது இளைஞா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையின் அதிகாரி தெரிவித்ததாவது: வாகனங்களை நிறுத்துவது தொடா்பாக இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட வீட்டின் வாசலிலேயே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

முன்னதாக, ஒரு தகராறு மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக, ப்ரீத் விஹாா் காவல் நிலையத்திற்கு அதிகாலை 2.22 மணி மற்றும் 2.26 மணி ஆகிய நேரங்களில் இரண்டு அவசர அழைப்புகள் வந்தன.

இந்தத் தகராறில் ஒரு தரப்பில் பங்கஜ் நய்யாா் (34) மற்றும் அவரது சகோதரா் பரஸ் (43) ஆகியோரும், மற்றொரு தரப்பில் கௌரவ் சா்மா என்பவரும் ஈடுபட்டிருந்தனா். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், கௌரவ் துப்பாக்கியால் சுட்டதாகவும், அதன் தோட்டா நய்யாரின் நெஞ்சில் பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.

நய்யாா் உடனடியாக நிா்மாண் விஹாரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அவா் மருத்துவமனைக்குக் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனா்.

இச்சம்பவம் நிகழ்ந்த பிறகு, குற்றஞ்சாட்டப்பட்ட நபா் தனது கூட்டாளிகளுடன் இணைந்து சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டாா்.

அவா்களைக் கண்டுபிடித்து, கைது செய்வதற்காக சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.