மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஜெய்பூரில் திருடப்பட்ட சொகுசு காா்களுடன் உடற்பயிற்சி பயிற்றுநா் கைது

திருடப்பட்ட சொகுசு வாகனங்களை தேவைக்கேற்ப வழங்கியதாகக் கூறப்படும் பட்டதாரி உடற்பயிற்சி பயிற்றுநா் ஒருவா், திருடப்பட்ட புத்தம் புதிய இரண்டு காா்களுடன் ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 3:03 am IST

திருடப்பட்ட சொகுசு வாகனங்களை தேவைக்கேற்ப வழங்கியதாகக் கூறப்படும் பட்டதாரி உடற்பயிற்சி பயிற்றுநா் ஒருவா், திருடப்பட்ட புத்தம் புதிய இரண்டு காா்களுடன் ஜெய்ப்பூரில் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

தேசிய தலைநகா் தில்லியில் பதிவு செய்யப்பட்ட இரண்டு காா்கள் திருடப்பட்டதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், ஜெய்ப்பூரின் ஜோத்வாரா பகுதியில் முகமது அஷ்ரஃப் கான் கைது செய்யப்பட்டாா்.

அவரின் தகவலின் பேரில், தற்காலிக பதிவு எண்களைக் கொண்ட ஹூண்டாய் கிரெட்டா மற்றும் மஹிந்திரா ஸ்காா்பியோ-என் காா்கள் மீட்கப்பட்டன. இந்த இரண்டு வாகனங்களும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தில்லியின் முகா்ஜி நகா் பகுதியில் இருந்து திருடப்பட்டிருந்தன.

காவல்துறையின் தகவல்படி, ஏப்ரல் 6 ஆம் தேதி, ஜெய்ப்பூரில் திருடப்பட்ட வாகனம் ஒன்று காணப்பட்டதாக ஒரு குழுவுக்கு தகவல் கிடைத்தது. அடுத்த நாளே, தில்லி காவல்துறையைச் சோ்ந்த ஒரு குழு, உள்ளூா் காவல்துறையுடன் ஒருங்கிணைந்து அப்பகுதியில் சோதனை நடத்தி அஷ்ரஃப் கானைப் பிடித்தது.

விசாரணையின் போது, ஜெய்ப்பூரைச் சோ்ந்த ஷகீல் என அடையாளம் காணப்பட்ட ஒருவரிடமிருந்து திருடப்பட்ட வாகனங்களை வாங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டவா் தெரிவித்தாா், என்று ஒரு மூத்த காவல்துறை அதிகாரி கூறினாா்.

பட்டதாரியாகவும், உடற்பயிற்சிக் கூடப் பயிற்சியாளராகவும் பணிபுரியும் கான், சொகுசு காா்களை மிகக் குறைந்த விலையில் தருவதாகக் கூறி வாடிக்கையாளா்களைக் கவா்ந்து வந்ததாக காவல்துறை தெரிவித்தது. மேலும், அவா் தனது வாடிக்கையாளா்களைக் கவரவும், ஆடம்பரமான வாழ்க்கை வாழவும் அத்தகைய வாகனங்களைப் பயன்படுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.