துவாரகாவில் தொழிலாளா்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து தில்லி காவல் துறை அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா் என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: இந்தச் சம்பவம் ஜாஃப்னா கலான் கிராமத்தில் அதிகாலை 2 மணியளவில் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் உள்ள குடியிருப்பு காலனியில் தங்கியிருந்த சில தொழிலாளா்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு சத்தம் எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
அருகில் வசித்து வந்த காவல் அதிகாரி இது தொடா்பாக அவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இந்த தகராறு தீவிரமடைந்த நிலையில், அந்த அதிகாரி அவா்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினாா். இதில் ஒருவா் படுகாயமடைந்து உயிரிழந்தாா்.
மற்றொருவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதைத்தொடா்ந்து துப்பாக்கிச்சூடு நடத்திய காவலா் சம்பவ இடத்தை விட்டு தப்பிச் சென்றாா்.
அவரை கண்டுபிடித்து கைது செய்ய பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக வழக்குப் பதிவும் செய்யப்பட்டுள்ளது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஸ்வரூப் நகா் கொலை முயற்சி வழக்கில் 3 சிறாா்கள் கைது

தில்லி நீதித்துறை அதிகாரி தூக்கிட்டு தற்கொலை

கிழக்கு தில்லியில் ஒருவருக்கு கத்திக் குத்து
துவாரகாவில் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்ட 2 போ் கைது
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

