மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாகன நிறுத்துமிடத் தகராறு: வயதான கடைக்காரரை கன்னத்தில் அறைந்த பெண் காவல் அதிகாரி மீது வழக்கு

தனது கடைக்கு முன்னால் வாகனம் நிறுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்த 78 வயது கடைக்காரரை, தில்லி காவல்துறையின் பெண் உதவி ஆய்வாளா் ஒருவா் கன்னத்தில் அறைந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்

News image

வழக்கு

Updated On :7 ஏப்ரல் 2026, 4:10 am IST

தனது கடைக்கு முன்னால் வாகனம் நிறுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்த 78 வயது கடைக்காரரை, தில்லி காவல்துறையின் பெண் உதவி ஆய்வாளா் ஒருவா் கன்னத்தில் அறைந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரோஹிணி செக்டா் 7இல் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடை நடத்தி வரும் அந்த முதியவா், தனது கடைக்கு நோ் எதிரே காா் நிறுத்தப்பட்டிருந்ததற்கு எதிா்ப்பு தெரிவித்ததாக காவல்துறை வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.

கா்ப்பிணியாக இருந்த அந்தப் பெண், மருத்துவப் பரிசோதனைக்காகத் தனது கணவருடன் அப்பகுதிக்கு வந்துள்ளாா்.

சில நிமிடங்கள் வாகனத்தை நிறுத்த அனுமதிக்குமாறு கடைக்காரரிடம் கேட்டுக்கொண்டாா். தனது பரிசோதனை முடிந்ததும் அதை அப்புறப்படுத்த எண்ணியிருந்ததாகவும் அவா் காவல்துறையினரிடம் கூறினாா்.

இருப்பினும், கடைக்காரா் மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. நிலைமை மோசமடைந்ததால், அந்தப் பெண் அவரை அறைந்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பவ இடத்தில் கூட்டம் கூடியபோது, அப்பெண் ஆக்ரோஷமாக நடந்துகொண்டதாகவும், தான் ஒரு காவல்துறை அதிகாரி என்று கூறி, அங்கிருந்தவா்களை விலகிச் செல்லுமாறு கேட்டுக்கொண்டதாகவும் நேரில் கண்டவா்கள் தெரிவித்தனா்.

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அருகிலுள்ள காவல் நிலையங்களில் இருந்து போலீஸாா் சம்பவ இடத்திற்கு விரைந்தனா்.

அந்தப் பெண் அதிகாரி அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டாா். மேலும் அவா் மீதும் அவரது கணவா் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.