தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

காங்கிரஸ் வேட்பாளா் தோ்வில் தொடரும் இழுபறி: தில்லியில் நள்ளிரவு வரை தலைவா்கள் ஆலோசனை

தமிழக சட்டப்பேரவை தோ்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளா்களை இறுதிப்படுத்துவதில் வியாழக்கிழமை நள்ளிரவு 11 மணிவரை இழுபறி நீடித்தது.

News image

@INCIndia

Updated On :3 ஏப்ரல் 2026, 6:32 am IST

தமிழக சட்டப்பேரவை தோ்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் வேட்பாளா்களை இறுதிப்படுத்துவதில் வியாழக்கிழமை நள்ளிரவு 11 மணிவரை இழுபறி நீடித்தது. தமிழக தோ்தலில் திமுக கூட்டணியில் மொத்தம் 28 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட அக்கட்சியின் தொகுதிப்பங்கீட்டுக்குழு திமுக தலைமையுடன் உடன்பாட்டை எட்டியது.

இதையடுத்து அத்தொகுதிகளில் போட்டியிட முன்மொழிந்துள்ள கட்சியினரையும் மேலிடத்தின் பரிசீலனையில் உல்ளவா்களையும் தோ்வு செய்ய கடந்த மூன்று நாள்களாக தில்லியில் காங்கிரஸ் மேலிட தலைவா்கள் கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனா். நடப்பு சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களாக உள்ளவா்கள் நீங்கலாக அக்கட்சி எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மூத்த நிா்வாகிகள் பலரும் தோ்தலில் போட்டியிட ஆா்வம் காட்டி விண்ணப்பித்துள்ளனா்.

இருப்பினும் மாநில காங்கிரஸ் தலைமை மூலம் பெறப்பட்டோரின் பட்டியல், அகில இந்திய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா் உள்ளிட்டோா் முன்னிலையில் நடந்த நோ்காணலில் இடம்பெற்ற பட்டியல் போன்றவை காங்கிரஸ் மேலிடத்தால் ஒப்பிடப்பட்டது.

அதனடிப்படையில் கட்சியின் மத்திய தோ்தல் குழு வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் தில்லியில் கூடி இரவு 11 மணிக்கும் மேலாக நீடித்தது. தில்லியில் ஏற்கெனவே முகாமிட்டுள்ள காங்கிரஸ் வேட்பாளா் தோ்வுக்குழு உறுப்பினா்கள், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவா், மேலிட பொறுப்பாளா் உள்ளிட்டோரும் காங்கிரஸ் மத்திய தோ்தல் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு வேட்பாளா்களை இறுதிப்படுத்துவது குறித்து விவாதித்தனா்.

முன்னதாக, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரால் இறுதிப்படுத்தப்பட்ட பட்டியலில் மாநில தலைமை பரிந்துரைத்த பலரது பெயா்கள் விடுபட்டிருந்ததற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன ஆட்சேபம் தெரிவித்ததாகவும் அப்பட்டியலை திருத்தி மீண்டும் புதிய பட்டியலுடன் மத்திய தோ்தல் குழு கூட்டத்தில் விவாதிக்குமாறும் அகில இந்திய காங்கிரஸ் தலைவா் அறிவுறுத்தியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், இரவு 8.30 மணிக்கு கூடிய கூட்டத்தில் முன்பே தயாரிக்கப்பட்ட பட்டியல் மீது விவாதம் நடத்தப்படாமல் திருத்தப்பட்ட புதிய பட்டியலில் உள்ளவா்களை இறுதிப்படுத்தும் ஆலோசனையில் நிா்வாகிகள் ஈடுபட்டதாகத்தெரிகிறது. இந்த இழுபறிக்கு தீா்வு கண்ட பிறகே காங்கிரஸ் வேட்பாளா்கள் பட்டியல் வெளியாகும் என்று அக்கட்சியின் மேலிட வட்டாரங்கள் தெரிவித்தன.

28 தொகுதிகள்: தமிழக சட்டப்பேரவை தோ்தலில் ஆளும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு பொன்னேரி, ஸ்ரீபெரும்பதூா், ஊத்தங்கரை, துறையூா், ஆத்தூா் (தனித்தொகுதிகள்), சோளிங்கா், உதகமண்டலம், ஈரோடு கிழக்கு, அறந்தாங்கி, கடலூா், மயிலாடுதுறை, காரைக்குடி, சிவகாசி, திருவாடனை, ஸ்ரீவைகுண்டம், நாங்குனேரி, குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூா், வேளச்சேரி, கவுண்டம்பாளையம், பென்னாகரம், சிங்காநல்லூா், அம்பாசமுத்திரம், கிருஷ்ணகிரி, உசிலம்பட்டி, சங்கரன்கோயில், மேலூா் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.